Saturday, May 22, 2010

ததேகூ உறுப்பினர்களுக்கு செட்டிக்குளம் முகாம் செல்ல அனுமதி மறுப்பு

Saturday, May 22, 2010
வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கு இன்று தாம் மேற்கொள்ளவிருந்த விஜயத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சற்று முன் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவுகளுக்கு அமைவாகவே இதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கூட்டமைப்பின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மணி நேரம் நடுவீதியில் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் 12 உறுப்பினர்களும் செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கும், வவுனியா பிரதேச தடுப்பு முகாம்களுக்கு இன்று செல்லவிருந்தனர்.
செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, மன்னாரில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் இடங்களுக்கு தாம் தற்போது சென்றுகொண்டிருப்பதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive