Saturday, May 22, 2010

தென்னிந்திய விமான விபத்தில் 160 பேர் பலி

Saturday, May 22, 2010
தென்னிந்தியாவின் மங்களூர் விமான நிலையத்தில் எயார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
துபாயிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் கர்நாடக மாநிலத்தின் மங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை 6 மணியளவில் தரையிறங்க முயன்றபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன் தீப்பற்றிக்கொண்டதாக விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரொய்டர் செய்தி கூறுகிறது.
இந்த விமானத்தில் 163 பயணிகளும் 6 விமானப் பணியாளர்களும் இருந்ததாகவும் இவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாமெனவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 160 என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி எஸ் ஆச்சார்யா உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive