Wednesday, May 19, 2010

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

Wed, 19/05/2010
மழை வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க, குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வு எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டபோதே இது தொடர்பான தீர்மானமெடுக்கப்பட்டதாக அமைச்சர் ஏ எச் எம் பௌஸி தெரிவித்தார்.
நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சொன்னார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 தினங்களுக்குச் சமைத்த உணவு வழங்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மரீனா மொஹமட் தெரிவித்தார்.
இதன் பின்னர் அவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்படுமென அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகக் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரால் ஆய்வுசெய்யப்படவுள்ளது.
ஆகக் கூடுதல் நிவாரணமாக 50 ஆயிரம் ரூபா வரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive