Wednesday, May 19, 2010

புலிகள் இயக்கம் இன்னமும் மிரட்டல்: இந்தியா

Wed, 19/05/2010
புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு இன்னமும் மிரட்டலாக உள்ளதாகப் புதுடெல்லி தெரிவித்துள்ளது.
இலங்கையில் சென்ற ஆண்டில் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டதற்கு இந்தியத் தலைவர்களே காரணம் என்று புலிகள் அமைப்பு குறைகூறி வருகிறது என்று இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பு தெரிவிக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் இறை யாண்மைக்கு இன்னமும் தொடர்ந்து ஒரு மிரட்டலாகவே இருந்து வருகிறது,” என்று அந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.
புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் ஒழித்துவிட்டது என்ற போதிலும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் மீண்டும் ஒன்று திரள்கிறார்கள்.
தனித் தமிழ் ஈழத்தை அமைக்க அவர்கள் மறுபடியும் ஒன்று கூடுகிறார்கள்” என்றும் அந்த அரசு இதழ் தெரிவிக்கிறது.
இலங்கைப் போரில் உயிர் தப்பிய புலிகள் இயக்கத்தினர், தங்களைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் என்றே இந்திய அரசாங்கத்தைக் கருதுகிறார்கள்.
இந்திய அரசையும் இலங்கை அரசையும் விரோதிகளாக நினைக்கும் அவர்கள் பழிக்குப் பழி வாங்க விரும்புகிறார்கள்” என்றும் அந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அத்தகைய போராளிகள், இந்தியாவைக் குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பயன்படுத்தி மறுபடியும் ஒன்று திரண்டு தாக்குதலைத் தொடங்கக்கூடிய சாத்தியத்தை மறுக்க முடியாது,” என்றும் அந்த அறிவிப்பு கூறியது.
புலிகள் அமைப்பின் தலைவர்களும் போராளி களும் ஆதரவாளர்களும் இந்தியாவின் இலங்கை கொள்கையை வெறுக் கிறார்கள் என்றும் இந்திய அரசிதழ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டதை அடுத்து, அதற்கு அடுத்த ஆண்டான 1992ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தியா தடை செய்தது.
அந்தத் தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவையாக இதுவரை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன் புலிகளுக்கு எதிரான தடையை நீட்டித்து இந்திய அரசு அறிக்கை வெளி யிட்டது. அதையொட்டி இப்போதைய அரசு இதழ் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே இலங்கையில் அவசரகால பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவர் என இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive