Sunday, May 30, 2010

வவுனியாவில் வீதியோரங்களில் உள்ள கடைகள் விரைவில் அகற்றப்படும்.

Sunday, May 30, 2010

வவுனியா நகரில் வீதி அபிவிருத்தி வேலைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காரணத்தினால் வீதியோரங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திட்ட வரைவின் அடிப்படையிலேயே இந்தக் கட்டிடங்கள் அகற்றப்படவிருப்பதாக வவுனியா செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கட்டிடங்கள் அகற்றப்படுவது தொடர்பில் அவற்றின் உரிமையாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்கள் சிலவற்றில் அமைக்கப்பட்டிருந்த வீதியோர மற்றும் சட்டவிரோத கட்டடங்கள் வீதி அதிகாரசபை அதிகாரிகளால் அகற்றப்பட்டமை குறிபிடத்தக்கது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive