Sunday, June 13, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் புலிகளால் அச்சுறுத்தலா,?

Sunday, June 13, 2010
அடுத்த வாரம் சென்னையில் ஆரம்பமாக இருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு புலிகளுக்கு ஆதரவான சக்திகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று பீதி கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொலிஸார் மாநாட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கோவையில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இம்மாநாட்டுக்குத் தலைமை தாங்குவார். உலகின் பல நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள் 7000 பேர்வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈழத் தமிழர்கள் கடந்த வருடம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் பேரழிவுகளைச் சந்தித்து இன்றும் முட்கம்பி முகாம்களுக்குள் முடக்கி விடப்பட்டிருக்கும் நிலையில் இப்படியொரு மாநாடு இந்நேரத்தில் அவசியம் தானா? என்று ஏராளமான விமர்சனங்கள் பல தரப்பட்ட தமிழர் அமைப்புக்களில்தமிழ்புத்திஜீவிகளிடம்இருந்தும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இம்மாநாட்டில் ம.தி.மு.க பங்கேற்க மாட்டாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இம்மாநாட்டுக்கு புலிகளுக்கு ஆதரவான சக்திகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று பீதி கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொலிஸார் மாநாட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இது குறித்து கோவை நகரப் பொலிஸ் ஆணையாளர் சைலேந்திரா பாபு தெரிவித்தவைவருமாறு:
நாம் எல்லா விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.எமது உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் மிகுந்த கரிசனை எடுத்துச் செயற்பட்டு வருகிறார்கள்.மாநாட்டுக்குப் பூரண பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது”

No comments:

Post a Comment

Followers

Blog Archive