Wednesday, May 12, 2010

மேலதிக பாதுகாப்புடன் சரத் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் : நீதிமன்றம் உத்தரவு

Wednesday, May 12, 2010
அவசரகால சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜெனரல் பொன்சேக்காவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
யுத்தம் வெற்றிக்காக உழைத்த இராணுவ வீரர்களில் சரத் பொன்சேகாவும் ஒருவர் என்பதால் இவ்விசாரனணயை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிபதி சம்பா ஜானகி ராஜரட்ன, தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதிக் கட்டப் போரின் போது வெள்ளைக்கொடிகளை ஏந்தி இராணுவத்தினரிடம் சரணடையவந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய சுட்டுக்கொன்றதாக சண்டேலீடர் ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஜெனரல் பொன்சேக்கா தெரிவித்திருந்தார்.
இந்தத் தகவல் தொடர்பான முறைப்பாட்டில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள அவர் இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Followers

Blog Archive