Thursday, May 13, 2010
சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகைதந்து தொழில்களில் ஈடுபட்ட 14 இந்திய பிரஜைகள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 பேர் வத்தளைப் பிரதேசத்தில் இரும்பு உருக்கும் நிலையமொன்றில் தொழில்புரிந்து கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டதாகத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் விலியம் தேவேந்திரராஜா தெரிவித்தார்.
ஏனைய மூவரும் செட்டியார் தெருவில் நகைக் கடையொன்றில் தொழில்புரிந்து கொண்டிருக்கும்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்
இந்தியப் பிரஜைகளின் விசா காலாவாதியாகியுள்ளதாகக் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டார்.
அவர்களை மிரிஹானவில் உள்ள திணைக்களத்தின் தடுப்பு முகாமுக்கு அனுப்பி இந்தியாவுக்கு திருப்பியனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு குடிவரவு குடியகல்வுச் சட்டங்களை மீறித் தொழில்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் மீண்டும் இலங்கைக்கு வரமுடியாதவாறு தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் அவர்களது பெயர்களைச் சேர்த்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது.
சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகைதந்து தொழில்களில் ஈடுபட்ட 14 இந்திய பிரஜைகள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 பேர் வத்தளைப் பிரதேசத்தில் இரும்பு உருக்கும் நிலையமொன்றில் தொழில்புரிந்து கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டதாகத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் விலியம் தேவேந்திரராஜா தெரிவித்தார்.
ஏனைய மூவரும் செட்டியார் தெருவில் நகைக் கடையொன்றில் தொழில்புரிந்து கொண்டிருக்கும்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்
இந்தியப் பிரஜைகளின் விசா காலாவாதியாகியுள்ளதாகக் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டார்.
அவர்களை மிரிஹானவில் உள்ள திணைக்களத்தின் தடுப்பு முகாமுக்கு அனுப்பி இந்தியாவுக்கு திருப்பியனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு குடிவரவு குடியகல்வுச் சட்டங்களை மீறித் தொழில்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் மீண்டும் இலங்கைக்கு வரமுடியாதவாறு தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் அவர்களது பெயர்களைச் சேர்த்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது.
No comments:
Post a Comment