Sunday, May 16, 2010

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

Sunday, 16 May 2010
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிறைன் எட்கின் தலைமையிலான குழுவினருக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி மற்றும் அரசாங்க அதிபர் கே.கணேஷ் ஆகியோருடன் சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.
அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போத அரசாங்க அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதி அதிகாரிகளின் விஜயம் வழமையானதென மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்த போதிலும், இலங்கை;கு மூன்றாம் கட்ட கடனை வழங்குவது தொடர்பிலான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் நடைபெறுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive