Friday, May 14, 2010

தேசிய நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது

Friday, 14 May 2010

படித்த படிப்பினைகளைக் கொண்டு பிரச்சினைகளின் அடிப்படையைக் கண்டறிவதற்காக ஏழுபேர் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழுவில் அங்கம் வகிப்போரின் பெயர்கள் அடங்கிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
பிரச்சினையின் அடிப்படையைக் கண்டறிந்து தீர்வு காணும் பொருட்டே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய தீர்வினை எட்டாவிடில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே மீண்டும் பிரச்சினையைத் தோற்றுவித்து விடும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2011 ஆம் ஆண்டிற்காகக் குறைநிறப்பு ஒதுக்கீட்டுப் பிரேரணை ஜுலை மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் எனவும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive