Friday, May 14, 2010

ஜீ-15 மாநாட்டின்; தலைமைப் பதவி இலங்கைக்கு

Friday, 14 May 2010

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும். ஜீ- 15 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இரான் பயணமாகவூள்ளாh;.
ஜனாதிபதியின் தலைமையில் விஷேட குழு ஒன்றும் பங்குபற்ற உள்ளது.
இன்று முதல் 17 ஆம் திகதி வரை ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக்குழு இன்று தெஹ்ரான் பயணமாகவூள்ளது.
ஜீ- 15 நாடுகளின் தலைமைப் பதவி இம்முறை இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. தற்பொழுது ஜீ-15 நாடுகளின் தலைமைப் பதவியை ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் வகிப்பதோடு மேற்படி தலைமை பதவி நாளைஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்க ப்படவூள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
ஜனாதிபதியூடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அடங்கலான உயர்மட்டக் குழு தெஹ்ரான் செல்ல உள்ளது. இலங்கை ஜனாதிபதி ஈரான் உட்பட பல நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவூம் அவர் கூறினார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive