Sunday, May 9, 2010

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய அரசாங்கத்துடன் இருத்தரப்பு உறவுகள் குறித்து விரைவில் பேச்சு ‐ இலங்கை

Sunday,May09, 2010

இலங்கை தொடர்பில் நட்பார்ந்த ரீதியில் செயற்படும் பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய அரசாங்கத்துடன் இருத்தரப்பு உறவுகள் குறித்து விரைவில் பேச்சு நடத்த எண்ணியுள்ளதாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவர் நிஹால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாதிற்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ள கன்சர்வேட்டிவ் கட்சியுடன் தூதரகம் ஏற்கனவே தொடர்புகளை உறுதிப்படுத்தி கொண்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சு நடத்த விரிவான அதிகாரங்களை கொண்டு தூதுக் குழுவொன்றை அனுப்பி வைக்குமாறு தான் ஜனாதிபதியிடமும் வெளிவிவகார அமைச்சரிடமும் கேட்டுக் கொள்ள உள்ளதாகவும் ஜயசிங்க கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive