Monday, October 4, 2010

முப்பது வருடங்களின் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் எம்வசம்-பொலனறுவையில் ஜனாதிபதி!

Monday, October 4, 2010
முப்பது வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் தற்போது எம் வசம் உள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொலனறுவைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலதிஸி மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில் மக்களுக்கான சேவையை நிறைவேற்றும் போது நாம் கட்சி நிறம் என பேதம் பார்ப்பதில்லை.

வட மத்திய மாகாணத்தை உள்ளடக்கும் அனுராதபுரம் பொலனறுவை மாவட்டங்களின் மக்கள் தேவையை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இம்முறை வரவூ செலவூ திட்டத்தில் நிதி ஒதுக்குவதற்குத் தயாராகிவருகின்றௌம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு மாவட்டத்தில் ஒரே கட்சியின் உறுப்பினர்கள் மட்டும் பாராளுமன்றத்தில் அமரும் காலம் இது. பொலனறுவை மாவட்டத்தில் ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த ஏர்ள் குணசேகரவூம் இப்போது எம்முடன் உள்ளார்.

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் தற்போது எம் வசம் உள்ளன. பொலனறுவை மாவட்ட மக்கள் புலிகளிடமும் காட்டு யானைகளிடமும் சிக்கித் தவித்த காலகட்டங்களை நாம் மறக்கவில்லை. சிங்கப்பூரைப் போன்று 20 மடங்கு பிரதேசத்தைப் புலிகள் தம் வசம் வைத்திருந்தனர்.

கடற் பரப்பில் 3ல் இரண்டு அவர்களிடம் இருந்தது. இப்போது சகலதும் இணைக்கப்பட்டு ஒரே ஆட்சியின் கீழ் ஒரே கொடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியாகவூம் ஐக்கியமாகவூம் வாழக்கூடிய சு+ழலை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது.

இந்த நிலைக்கு நாட்டைக் கொண்டு வருவதற்கு மதத் தலைவர்களும் மக்களும் வழங்கிய பங்களிப்புகள் அளப்பரியவை. அதற்காக அவர்களுக்கு நாம் நன்றிகூறுகின்றௌம்.

இப்போது எல்லைக் கிராமங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இம் மாவட்டம் அரசர்கள் ராஜதானிகளைக் கொண்டிருந்த மாவட்டமாகும். இங்கிருந்து முழுநாட்டிற்கும் அரிசி வழங்க முடியூம்.

விவசாய சமூகத்தின் சகல தேவைகளையூம் நிறைவேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தமது பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.

பொலனறுவை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்குச் செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக அறிய முடிகிறது. பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்குவதில் பெற்றௌர் உரிய பங்களிப்பையூம் அர்ப்பணிப்பையூம் வழங்குவது அவசியமாகும்.

நாம் எத்தகைய அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் பிள்ளைகளை கல்வியிலும் ஒழுக்கத்திலும் முன்னேற்றாவிடில் பயனில்லை. பிள்ளைகள் போதைக்கு அடிமையாகாமல் நல்வழியில் செல்ல பெற்றௌர்களும் அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும். குறிப்பாக பெற்றௌர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டும் எனவூம் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

விடிவின் இன்னுமொரு பரிமாணம்!

Monday, October 4, 2010
இற்றைக்கு சுமார் ஒரு வருட காலத்துக்கு முன்னர் தலை நகரில் நடமாடுவதென்பது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடுவதற்கு ஒப்பானது. எந்த நேரத்தில் எந்த இடத்தில் என்ன மாதிரியான குண்டு வெடிக்கும் என்ற பீதி மக்களை ஆட்கொண்டிருந்த காலம் அது. தலை நகரில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் எந்தப் பாகத்தையும் இந்தப் பீதி விட்டுவைக்கவில்லை. குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நடமாடும்போது ஒன்றில் கால்களை இழக்க நேரிடும் நிலை அல்லது உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையே காணப்பட்டது.

சுமார் மூன்று தசாப்தங்கள் நீடித்த இந் நிலையை முற்றாக மாற்றி மக்கள் இன்று எந்தப் பீதியுமின்றி பருத்தித் துறை முதல் தேவேந்திர முனை வரையான முழு இலங்கைத் தீவிலும் சுதந்திரமாகவும் உயிருக்கான உத்தரவாதத்துடனும் நடமாடக் கூடிய நிலையை மிகக் குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாகத் தோற்றுவித்து இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து நிற்கும் உதாரண புருஷரான நம் நாட்டின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலப் பகுதி இந் நாட்டு வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலப்பகுதியாகும்.

அத்தோடு மட்டும் நின்று விடவில்லை நமது ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்து உலகுக்கு ஆச்சரியமூட்டும் பல நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். அவ்வகையான ஒரு நிகழ்வுதான் அன்மையில் வவுனியா கலாசார மண்டபத்தில் நடந்தேறியது. அதாவது உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட எல்ரீரீஈ இயக்கத்தின் முன்னாள் அங்கத்தவர்களை போர்க் கைதிகளாகப் பிடித்து சித்திரவதைக்குட்படுத்துவதற்கு மாறாக புனர்வாழ்வு நிலையங்களில் அவர்களுக்கு துறைசார் தெழிற் பயிற்சிகளை வழங்கியது மாத்திரமன்றி தொழிற் சந்தையில் இலகுவாக அவர்கள் தொழில் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சுய தொழில் செய்ய இருப்பவர்களுக்கு இலகு வட்டியுடனான கடனாக இரண்டரை லட்சம் ரூபாக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு புனர்வாழ்வு நிலையங்களில் தொழிற் பயிற்சி பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சுமார் 403 பேர் கடந்த 30ஆம் திகதி காலை பத்து மணியளவில் வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் அவர்களது பெற்றௌர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெற்றது உலகிலேயே இலங்கையில்தான் முதன்முறையாகும்.

இவ்வாறு தம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் எல்ரீரீஈ அங்கத்தவர்கள் பலர் கருத்து வெளியிடுகையில் “தாங்கள் புது மாத்தளனில் வைத்து கைது செய்யப்பட்டபோது இதன் பிறகு எமக்கென்றொரு எதிர்காலமில்லை மரணம்தான் எமது முடிவாக அமையப் போகிறது என்று நினைத்த எமக்கு ஆச்சரியமூட்டும் வகையில் எந்தவிதமான சித்திரவதைகளும் செய்யாமல் சிறைகளில் கூட எம்மை அடைத்து வைக்காது புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைத்து தொழிற் பயிற்சிகள் வழங்கியது மாத்திரமன்றி தொழிற் சந்தையில் இலகுவாக தொழில்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தந்ததுடன் சுய தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு கடன் வழங்கி ஒளிமயமான எதிர்காலமொன்றை எமக்கு ஏற்படுத்த இந்த அரசாங்கத்துக்கு என்றென்றும் நன்றிக்குரியவர்களாக இருக்க நாங்கள் கடமைப்பட்டவர்கள்” என்று தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ குணசேகர பிரதியமைச்சர், விஜிதமுனி சொய்சா ,அரச மற்றும் இராணுவ உயரதிகாரிகள் பெற்றோர்கள் பொது மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Sunday, October 3, 2010

கிளிநொச்சியில் தமிழ் அரசியல் கட்சிகள் சந்தித்து பேச்சுவார்த்தை.


Sunday, October 03, 2010
தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள உடனடி தேவைகள் குறித்து இன்றைய தமிழ் கட்சிகளின் அரங்கம் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது என ஸ்ரீ டெலோ சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டதொடர் கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் வரதராஜபெருமாள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பூ.பிரசாந்தன், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு செயலாளர் கே.சிவாஜிலிங்கம், புளோட் சார்பில் உதயன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஐந்து விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, வடகிழக்கில் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட போராளிகள் உட்பட பொதுமக்களின் மரணச் சான்றிதழை பெற்றுக்கொடுள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

பொதுவாக ஒருவர் காணாமல்போகும் பட்சத்தில் அவர் 5வருடங்களில் திரும்பிவராவிட்டால் அவருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்படுகின்றது. எனினும் ஜே.வி.பி.யினர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்றின் படி இரண்டு வருடங்களில் அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதன் காரணமாக யுத்த காலத்தில் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் கொல்லப்பட்ட பொதுமக்கள் இதுவரையில் மரணச்சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமத்தினை எதிர்நோக்கிவருகின்றனர்.

இதேபோன்று யுத்த காலத்தில் பிறந்த பிள்ளைகளுக்கான பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை இருந்தது.அதனை பெற்றுக்கொடுப்பது சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டன.

அத்தோடு வடகிழக்கில் காணி உரிமையற்றவர்கள் குடியேறுதல் தொடர்பிலான தகவல்களை திரட்டி இது விடயமாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மழைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. ஆதலால் அந்த மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்து யுத்த நடவடிக்கையில் ஈடுபட்ட புலி உறுப்பினர்களுக்கு மாத்திரமே அரசாங்கம் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்கள் பக்கமே அரசு முழுமையான கவனத்தை செலுத்திவருகின்றது.

ஆனால் யுத்த நிலையின்போது புலிகளினால் பாதிக்கப்பட்டு இன்று எதுவும் அற்ற நிலையில் உள்ள ஏனைய இயக்க உறுப்பினர்கள் தொடர்பில் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் நலன் தொடர்பில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உதவுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

Sunday, October 03, 2010
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் கூட்டத்த்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி இந்த அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுனர் உள்ளிட்ட முக்கிய அரசாங்க அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருப்பதனால் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்தகளத்தில் நடந்தது என்ன? - அரசு சரியாக வெளிப்படுத்தாததால் புலிகள் சாதகமாக்கிக் கொண்டுள்ளனர் - பேராசிரியர் றொகான் சுட்டிக்காட்டு.

Sunday, October 03, 2010
யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச் சாரங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச பயங்கரவாத தடுப்பு நிபுணர் பேராசிரியர் றொகான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

யுத்த களத்தில் என்ன நேர்ந்ததென்பதனை உலகிற்கு அரசாங்கம் சரியான முறையில் வெளிப் படுத்தத் தவறியுள்ளதாகவும் இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து சாதகமான பிரசாரங் களை மேற்கொள்வதற்கு அரசியல் தலை வர்கள் முன்வராமை ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்ற சிவிலியன் இழப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் சரியான தகவல்களை வெளியிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் கடமையாற்றிய மருத்து வர்களுடன் நடத்திய செவ்விகளின் அடிப்படை யில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உச்ச பட்ச மாக ஆயிரத்து 400 பொதுமக்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வரு கிறது அதனை இல்லாதொழிப்பதற்கு நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். வட அமெரிக் காவில் மட்டும் 42 புலித் தலைவர் கள் இயங்கி வருகின்றனர். புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டி யது. சர்வதேச வலையமைப்பை முடக்குவது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.

நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கிவரும் நெடியவன் இன்னமும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான பிரசாரங்களை மேற் கொண்டுவருகிறார்.இதேவேளை இலங்கையில் நிரந்தர சமா தானம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண வேண்டியது அவசியம்.இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் இன்னமும் தெளிவாக புரிந்து கொள்ள வில்லை என பேராசிரியர் றொகான் குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று இலங்கை விஜயம்!

Sunday, October 03, 2010
சீனாவின் என்.ஐ.சீ.எனப்படும் சீன தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கொழும்பை வந்தடைந்தனர். மட்டக்களப்பு மாவட்டம் கரடிய னாறு பொலிஸ் வளாகத்தில் நிகழ்ந்த டைனமற் கொள்கலன் வெடிப்பு சம்ப வம் தொடர்பில் சந்தேகம் வெளியிட் டுள்ள நிலையில் அது குறித்து நாடளா வியரீதியில் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்கே இவ்வமைப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஏனைய சீன நிறுவனங்களின் பாதுகாப்புத் தொடர்பாகவும் இப் புலனாய்வுக் குழு வினர் ஆராயவுள்ளனர் என சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதேவேளை கரடியனாறு வெடிப்புச் சம்பவம் குறித்து ஏற்கெனவே இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளமையை சீன ஊடகமான சிங்குவா மேற்கோள்காட்டியுள்ளது.

Thursday, September 30, 2010

சரத் பொன்சேகாவுக்கு 30 மாதக் கடூழியச் சிறை

Thursday, September 30, 2010
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கீகரித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பின் மூலம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 30 மாதக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதியின் சிபாரிசு அடங்கிய ஆவணம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

இராணுவ நீதிமன்றத்தின் நியமனம் மற்றும் தண்டனைகளை உறுதிப்படுத்தும் அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டவரும் முப்படைத் தளபதியுமான ஜனாதிபதியால் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு செப்டெம்பர் 29 ஆம் திகதி - அதாவது நேற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புக்கு விசேட அதிகாரசபை வேண்டுமென்கிறார் விமல்.

Thursday, September 30, 2010
கொழும்பு நகரை விசேட அதிகார சபையின்கீழ் கொண்டுவரவேண்டுமென பொறியியல் சேவை, வீடமைப்பு, மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கிறார்.

கொழும்பில் நேற்று, தேசிய நிர்மாண சேவைகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று தனது வெற்றிகளைவிட தோல்விகளுக்கு உரிமைகோரும் நிறுவனமாகக் கொழும்பு மாநகரசபை உள்ளது என்பதைக் கவலையுடன் கூறவேண்டுமென அமைச்சர் சொன்னார்.

"இன்று நாட்டின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானமெடுக்கும் நிலையில், தலை நகர் தொடர்பாக விசேட தீர்மானத்தை எடுக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே கொழும்பு நகரை விசேட அதிகார சபையின்கீழ் கொண்டுவந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென நான் கருதுகிறேன்." என அமைச்சர் விமல் வீரவன்ச அங்கு கூறினார்.

இதன்மூலம் பல வருடங்களாக சிரமங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்குத் தீர்வு கிடைக்குமென்றும் வறிய மக்களுக்குச் சிறந்த வீடமைப்புத் திட்டங்களை அல்லது மாடிவீட்டுத் திட்டங்களை அமைத்துக் கொடுக்க முடியுமெனவும் அவர் சொன்னார்

கடவுச் சீட்டைப் பெறுவது சுலபமாகிறது.

Thursday, September 30, 2010
எம்(M) மற்றும் என் (N) தொடரிலான கடவுச் சீட்டு உரிமையாளர்கள் புதிதாகக் கடவுச் சீட்டினைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை இலகுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தில் இலகுவான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகக் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.

நாளைய தினம் புதிய விண்ணப்பப் படிவம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்புவது இலகுவானதாகுமென்றும் அதனை உறுதிப்படுத்தத் தரகர்களின் பின்னால் அலையத் தேவையில்லையெனவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் கூறினார்.

புதிய விண்ணப்பப் படிவத்தை சமாதான நீதவான் அல்லது சட்டத்தரணி ஆகியோர் உறுதிப்படுத்துவது அவசியமில்லை எனவும் விண்ணப்பதாரியின் பெயர், பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், கையொப்பம் மற்றும் புதிதாகப் பிடிக்கப்பட்ட புகைப்படம் என்பன மாத்திரமே போதுமானதாகும்.

எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் கடவுச் சீட்டுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதற்கும் அவற்றை உறுதிப்படுத்துவதற்கும் சுமார் 300 ரூபா வரை தரகர்களினால் அறவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய விண்ணப்பப் படிவம் ஒரேயொரு தாளில் அச்சிடப்பட்டுள்ளதால் அவற்றைக் கள்ஞ்சியப்படுத்துவதும் சுலபமாக இருக்குமெனக் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.

வடகிழக்கில் எதிர்பார்த்த பொருளாதாரப் பிரதிபலன் இல்லையாம்.

Thursday, September 30, 2010
வடகிழக்குப் பிரதேசங்களில் எதிர்பார்த்த பொருளாதாரப் பிரதிபலன்கள் உரிய முறையில் கிடைக்கவில்லையெனக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்றுக் கூடிய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொருளியல் நிபுணர் கலாநிதி சமன் கெலேகம சாட்சியமளிக்கையிலேயே இந்தக் கருத்தை வெளியிட்டார்.

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பொருளாதார அனுகூலங்களைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கத்தின் ஒட்டுமொத்தச் செயற்பாடுகளும் வலுவற்றதாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டார்.

கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியிலும் அரசாங்கம் செயலிழந்துள்ளது என்றும் அவ்வாறு இடம்பெற்ற காலத்தில் ஜனாதிபதி அரசியல் அமைப்பு மற்றும் நிறைவேற்றதிகாரம் என்பவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவது இலகுவான காரியமாக அமையவில்லை எனவும் கலாநிதி சமன் கெலேகம கூறினார்.

இதன்மூலம் போர்நிறுத்தம் செயலிழந்தமையை அவதானிக்கமுடிந்ததாக அவர் ஆணைக்குழுவின் முன்னர் சுட்டிக்காட்டினார்.

Monday, September 20, 2010

அவுஸ் திரேலியாவில் இலங்கையருக்கு தண்டனை.

Tuesday, 21 September 2010
இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஐந்தரை வருட சிறைத் தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இவர், இலங்கையில் இருந்து 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவுஸ்தி ரேலியாவுக்கு ஆட்களை கடத்தி வந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார்

பத்மேந்திரா புலேந்திரன் என்ற இவர், கசிவு ஏற்பட்ட கப்பல் ஒன்றில் சுமார் 200 அரசியல் தஞ்சம் கோருபவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றிருந்தார்.

இவர் இந்தோனேசியாவில் முகவராக செயற்பட்டதுடன் இந்தப்படகின் மூலம் இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்தான்,அகதிகளை சட்டவிரோத அழைத்துச்சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்

அத்துடன் இவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையிலேயே அவுஸ்திரேலிய நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது

பொதுமக்களை சட்டவிரோதமாக அழைத்துச்செல்பவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் 20 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை வழங்கமுடியும் என நீதிபதி, ரொபைன் டுப்மன் தெரிவித்துள்ளார்

அத்துடன் குற்றவாளி சட்டவிரோத அகதிகளில் இருந்து பெற்றதாக கருதப்படும் 40 ஆயிரம் டொலர்களை அபராதமாக செலுத்;தவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மீள் குடியேற்றப்பட்டவர்களுக்கு இராணுவத்தினரின் உதவி.

Tuesday, 21 September 2010
மன்னார் மாந்தை மேற்க்குப் பகுதியான பாலயடி புதுக்குளம் பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம், தச்சுவேலை மேசன் மற்றும் கூலித் தொழில்களாகும்.

இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேன்படுத்த வேன்டிய தேவைகளை அறிந்து கொன்ட இராணுவத்தின் 543வது படைத்தளத்தின் சிவில் இணைப்பதிகாரி பாலயடி புதுக்குளம் பகுதியில் தேர்ந்தெடுக்கப்ட்ட 78 குடும்பங்களுக்கு விவசாயம் மற்றும் சுய தொழில்களுக்குததேவையான உபகரணங்களையும் மின்பிறப்பாக்கிகளும் கடந்த 17 ஆம் திகதி வழங்கப்படது. மேலும் தேசிய சேமிப்பு வங்கியில் பணவைப்புச் செய்யப்பட்டு புத்தகங்களும் கையளிக்கப்ட்டது.

பின்வரும் உபகரணங்கள் 78 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும்அதற்க்குத் தேவையான உபகரனங்கள் 49
மின்பிறப்ப்பாக்கி 02
தையல் இயந்திரம் 01
துவிச்சக்கர வண்டி 02
மேசன் உபகரனங்கள் 03
தச்சு வேலை 03
கம்பி றோல்கள் 40

இப்பொருட்கள் வழங்கி வைக்கும் வைபவத்துக்கு 54 படைத்தளத் தளபதி பிரிகேடியர் மைத்திரி டயஸ்,542 பிரிகேட்டின் தளபதி கேனல் அருன முகாந்திரம் மற்றும் சிவில் இணைப்பதிகாரி லெப்டினன் கேனல் நலிந்த மகாவிதான ஆகியோரும் கலந்து கொன்டனர்

வவூனியா மாவட்டத்தில் 2900 வீடுகளை ஐரோப்பிய ஒன்றியம் நிர்மாணிக்கும்!

Monday, 20 September 2010
வவூனியா மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவூனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வவூனியா மாவட்டத்தில் புதிதாக 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவூள்ளன. இதற்கு மேலதிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் 2 ஆயிரத்து 900 வீடுகளை வழங்கவிருப்பதாகவூம் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமானது குறிப்பாக மோதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலிருந்து வவூனியா மாவட்டத்தில் குடியேறியூள்ள தெரிவூ செய்யப்பட்ட 2இ900 குடும்பங்களுக்காகவே புதிதாக வீடுகளை வழங்க முன்வந்துள்ளன. மீள்குடியேறியவர்கள் தொடர்ந்தும் அதே பகுதியில் வசித்து வருவது உறுதிப் படுத்தப்படும் பட்சத்திலேயே அவர்களுக்கு வீடு நிர்மாணிப்பதற்கான நிதியூதவி பெற்றுக்கொடுக்கப்படுமெனவூம் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான பயனாளிகளை தெரிவூ செய்யூம் வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர் பிரிவூகளினூடாக இதற்கென பிரத்தியேக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கிடைக்கப்பெறும் நிரப்பப்பட்ட விண் ணப்பங்களுள் தெரிவூ செய்யப்பட்டோர் தொடர்பான விபரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் வீடொன்றின் நிர்மாணப் பணிகளுக்காக தலா 3 இலட் சத்து 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்க விருப்பதாகவூம் அரச அதிபர் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் 6 இலங்கை மீனவர் விடுதலை 46 தொடர்ந்தும் தடுத்துவைப்பு.

Monday, 20 September 2010
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தார்கள் என இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 6 இலங்கை மீனவர்கள் மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலையீட்டையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் பயணம் செய்த படகு கடந்த பெப்ரவரி 21ம் திகதி இந் திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிர வேசித்து மீன்பிடித்தல் ஈடுபட்டிருந்ததுடன் போதை வஸ்து கடத்தலிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப் பட்டனர்.

மேற்கூறிய குற்றச்சாட்டுகள் காரணமாக குறிப்பிட்ட மீனவர்கள் பயணம் செய்த படகு தடுத்து வைக்கப்பட்டு மீனவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட் டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர்வள அபி விருத்தி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்று கூறுகிறது. இந்த மீனவர்களை விமான மூலம் இலங்கைக்கு அழைத்துவர அமைச்சுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவாகியூள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள படகை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 46 மீனவர்கள் 13 படகுகளுடன் இந்தியாவில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதற்கு முன் தமிழ்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த மீனவர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலையீட்டின் பேரிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Friday, September 17, 2010

அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் ஜனநாயக அம்சம் கொண்டது.

Friday, September 17, 2010
அரசாங்கத்தின் 18வது அரசியலமைப்புத் திருத்தம் முன் னைய ஐ.தே.கவின் திருத்தங்களை விடவும் பன்மடங்கு ஜனநாயக அம்சம் கொண்டதென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கருவுக்கு அமைச்சர் சுசில் பதில

61 இலட்சம் மக்களின் வாக்கு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு ஆதரவாகக் கிடைத்தவையே எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர்; 18வது அரசியலமைப்புத் திருத்தம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலம் போன்று அவசர மாகப் பாராளு மன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டதொன்றல்ல எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய அரசாங்கத்துக்கு எதிராக வெளியிட்டு வரும் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக “அரசாங்கத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிராக அணிதிரள் வதற்கு காலத்தை அர்ப்பணிப்பேன்” என அவர் வெளியிட்டுள்ள அறிக்கைக்குப் பதிலளித்துள்ள அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது இருப்பது கரு ஜயசூரியவின் ஐ.தே.க வினால் 1978ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கு உட்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கமுமாகும்.

அத்துடன் 13வது திருத்தத்தினூடாக ஐ.தே.க அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பது மாகாண சபைகளில் எட்டு மாகாண சபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நிர்வாகத்திலும் ஐ.தே.க வால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேச சபை சட்ட மூலத்திற்கிணங்கிய பெருமளவு பிரதேச சபைகளும் அரசாங்கத்தின் நிர்வாகத்திலேயே உள்ளன. இதற்கான பெரும்பான்மை அதிகாரங்கள் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வையாகும்.

1977ம் ஆண்டு ஆறு வருடங்களுக்காக நியமிக்கப்பட்ட எம்.பிக்கள் மற்றும் நிர்வாக முறையை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மேலும் ஆறு வருடங்களுக்கு ஐ.தே.க. நீடித்தபோது ஜே.ஆரின் சர்வாதிகாரம் பற்றியோ ஐ.தே.க.வின் சர்வாதிகாரம் பற்றியோ கரு ஜயசூரிய எம்.பி. குரலெழுப்பவில்லை.

யுத்தம் எனும் சாபத்திலிருந்து நாட்டை மீட்பதற்காகவே தாம் அரசாங்கத்துடன் இணைந்ததாக கூறிய கரு ஜயசூரிய; அவருடன் அரசாங்கத்தில் இணைந்த ஏனையோர் இறுதி யுத்தம் வரை அரசுடன் இருந்தபோதும் இடை நடுவில் எதிர்க்கட்சிக்கு மீண்டும் சென்றமை எந்தவிதத்தில் நியாயமாகும்?

அரசாங்கம் கொண்டு வந்துள்ள 18 வது அரசியலமைப்புத் திருத்தம் ஐ.தே.க அதன் ஆட்சிக்காலத்தில் மேற் கொண்ட திருத்தத்தை விட ஜன நாயக ரீதியானது.

18வது திருத்தம் சர்வாதிகாரமானதல்ல. அவ்வாறு இருந்திருக்குமானால் கரு ஜயசூரிய பத்திரிகைக்கு அறிக்கை விடுவதை விட்டுவிட்டு கடந்த 8ம் திகதி பாராளுமன்றத்துக்கு வந்து ஹன்சாட்டில் பதியும்படி தர்க்க ரீதியான விடயங்களை முன்வைத்திருக்கலாமே அதனை ஏன் அவர் செய்யவில்லை? அவரது பத்திரிகைக் கூற்றின் தர்க்கப்படி, 2010 ஜனாதிபதி தேர்தலின் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது பற்றி கூறப்படவில்லை என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.

கரு ஜயசூரிய ஆதரவு வழங்கிய சரத் பொன்சேகா நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக மக்களுக்குக் கூறிய போதும் அவருக்கு 40 இலட்சம் வாக்கே கிடைத்தது. இதன் மூலம் அக்கருத்தை மக்கள் நிராகரித்துவிட்டமை தெளிவாகிறது.

13வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக படையினரின் பாதுகாப்புடன் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை அழைத்துவந்ததை அவர் மறந்துவிட்டாரா? அப்போது ஐ.தே.க. எம்.பிக்கள் வழங்கிய இராஜினாமாக் கடிதங்கள் ஜே. ஆரிடம் பத்திரமாக இருந்ததையும் கரு ஜயசூரிய ஞாபகப்படுத்திப் பார்க்கட்டும்.

2002 பெப்ரவரியில் ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் போது கரு ஜயசூரிய எவ்வித அதிர்ச்சியுமடையாதது புதுமைதான்.

2003ல் மின் சக்தித்துறை அமைச்சராக அவர் இருந்தபோது இந்திய ஒயில் கம்பனிக்கு திருகோணமலை எண்ணெய்க்குதத்தை குத்தகைக்கு வழங்கவும் பெற்றோலியக் கூட்டுத்தாப னத்தை மூன்றாகப் பிரித்து அதில் மூன்றில் ஒரு பகுதியை விற்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் கூட்டுத்தாபனத்தி ற்குப் பெற்றுக்கொடுத்தார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் எதிர்காலத்தில் ஜனநாயக அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்வதுடன் இலங்கையை ஆசியாவின் உன்னத நாடாக உயர்த்தும் எனவும் அமைச்சர் தமது பதிலில் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மேலும் 3000 ஏக்கரில் நெற்செய்கை.

Friday, September 17, 2010
யாழ்ப்பாணத்தில் அடுத்த பெரும் போகத்தின் போது மேலும் மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பயிர்ச் செய்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு வசதியாக இம்மாத இறுதிக்குள் தென்மராட்சி, அராலி போன்ற பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை துரிதமாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், வட மாகாண ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது மேற் கொள்ளப்பட்டுவரும் பயிர் செய்கை களுக்கு மேலதிக மாகவே 3000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கைகளை மேற் கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

Sunday, September 12, 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம் 3 கோரிக்கை வலியுறுத்து!

Sunday, September 12, 2010
தமிழ் கட்சிகளின் அரங்கம் திகதி - 11.09.2010 இடம் - புளொட் காரியாலயம், கொழும்பு இக்கூட்டத்தில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

1. மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட வன்னி மக்கள் சொல்லொண வேதனைகளை அனுபவித்து இழப்புக்களைச் சந்தித்து பல தடவைகள் இடம்பெயர்ந்து தற்போது மீளக் குடியேறி வரும் சூழ்நிலையில் வன்னிப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற விடாமல் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பதோடு வேறு இடங்களில் குடியேறும்படி நிர்ப்பந்திப்பதை நிறுத்த வேண்டுமென்று அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

அகதிகளான மக்கள் அனைவரும் அவரவரது சொந்த இடங்களிலேயே மீளக் குடியேறுவதற்கான ஏற்பாடுகளையும், உதவிகளையும் அரசாங்கம் முழுமையாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

2. மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திரு.சகாயமணி கடத்தப்பட்டு காணாமற்போய் மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும், அவர் மீட்கப்படாத நிலையில், அவரது குடும்பம் மிகவும் ஆழ்ந்த வேதனையில் இருப்பதையிட்டு அரங்கம் கவலை கொண்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் சட்டபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து அவரை மீட்க வேண்டுமென்று இவ்அரங்கம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறான கடத்தல் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாத நிலைமையை உறுதிப்படுத்த வேண்டுமென அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்.

3. கிழக்கு மாகாணத்தில் கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வது தொடர்பாக கிழக்கு மாகாண சபையால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவுகளை தமிழ் கட்சிகளின் அரங்கம் ஆதரிப்பதோடு அவற்றையே எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு முடிவாக செயற்படுத்த வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

பெயர், கட்சி, கையொப்பம்

வீ. ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணி ஏ.கைலேஸ்வரராஜா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அ.இராசமாணிக்கம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செ. சந்திரகாசன் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் ப. உதயராசா சிறீ தமிழீழ விடுதலை இயக்கம் தி. ஸ்ரீதரன் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ம.க.சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு த. சித்தார்த்தன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்  

இக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் ஏ.கைலேஸ்வரராஜா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அ.இராசமாணிக்கம், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கம் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் செயலர் தி. ஸ்ரீதரன், முன்னாள் வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலர் ம.க.சிவாஜிலிங்கம், புளொட் தலைவர் த. சித்தார்த்தன் ஆகியோரும் மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மக்கள் விருப்புடன் நாட்டை கட்டியெழுப்புகிறேன்.

Sunday, September 12, 2010
மக்களிளை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றி நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். மக்களின் அவசியத்தை புரிந்து கொண்டு நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீத்தாவாக்கை பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதியை இன்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். மகிழ்ச்சியான மக்கள் இல்லாவிடின் நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாதென ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து இன்று காலை 18 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

Sunday, September 12, 2010
மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து இன்று காலை 18 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுள் பெண்ணொருவரும் அடங்குவர். தேசிய சிறைக்கைதிகள் வாரத்தையொட்டி இறுதிநாளான இன்று இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார தெரிவித்ததார்.

கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சீனாவிற்கு விஜயம்.

Sunday, September 12, 2010
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ, கடற்படை மற்றும் வான் படை உயரதிகாரிகளும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தலைமையிலான உயர் மட்ட இராஜதந்திரிகள் குழு ஒரு வார காலம் தங்கியிருந்து சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளல் தொடர்பில் இந்த விஜயத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

புலிகளுக்கு எதிராக யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கைக்கு அதிகளவு இராணுவத் தளவாடங்களை சீனா வழங்கியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Followers

Blog Archive