Friday, September 17, 2010

யாழ்ப்பாணத்தில் மேலும் 3000 ஏக்கரில் நெற்செய்கை.

Friday, September 17, 2010
யாழ்ப்பாணத்தில் அடுத்த பெரும் போகத்தின் போது மேலும் மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பயிர்ச் செய்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு வசதியாக இம்மாத இறுதிக்குள் தென்மராட்சி, அராலி போன்ற பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை துரிதமாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், வட மாகாண ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது மேற் கொள்ளப்பட்டுவரும் பயிர் செய்கை களுக்கு மேலதிக மாகவே 3000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கைகளை மேற் கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive