Monday, May 24, 2010

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கோரிக்கை .

May 24, 2010
இலங்கையின் உள்விவகாரங்களில் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனை தலையிட வேண்டாம் என இலங்கை, வேண்டுகோள் விடுத்துள்ளது.
இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றியும் ஐக்கிய நாடுகள் சபை சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை நியமித்து உண்மைநிலையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புலிகளின் துஷ்பிரயோகம் தொடா;பான ஐ.நா.வின் அறிக்கை காலம் கடந்தது!

May 24, 2010
வன்னியில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யூத்தத்தின் போது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களை சுட்டிக்காட்டியூள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது காலம் கடந்த நடவடிக்கை என்று அராசாங்கம் அறிவித்துள்ளது.
புலிகள் இயக்கமே இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்றும்இ படையினர் அவ்வாறான குற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யூத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியூள்ளனர். இதனால் தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை புலி உறுப்பினர்கள் என கருதிய இராணுவத்தினர்இ முகாம்களில் அவர்களை வித்தியாசமான முறையில் நடத்தியூள்ளனர் என்றும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருப்பினும்இ சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை படையினர் முறையாக நடத்தி அவர்களுக்கான மருத்துவ உதவிகளையூம் செய்தனர் என்று தெரிவித்த ஊடக அமைச்சர்இ சரணடைந்த புலிகளிடம் படையினர் தவறுதலாக நடந்துகொள்ளவில்லை என்றும் கூறினார்

கொழும்பு வீதி அபிவிருத்திப் பணிகளில் சிறைக் கைதிகள்

May 24, 2010
கொழும்பு வீதி அபிவிருத்திப் பணிகளில் சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை முன்னிட்டு வீதி அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
60 வீதமான சிறைக் கைதிகள் நகர அபிவிருத்திப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் நிர்வாக அதிகாரி ஒமர் காமில் குறிப்பிட்டுள்ளார். நகர அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வரும் கைதிகளின் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது நிலவி வரும் மோசமான காலநிலையினால் வீதி அபிவிருத்திப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், திரைப்பட விழாவிற்கு முன்னதாக வீதி அபிவிருத்திப் பணிகள் பூர்த்தியாகும் என நகர நிர்வாகி ஒமர் காமில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Saturday, May 22, 2010

ததேகூ உறுப்பினர்களுக்கு செட்டிக்குளம் முகாம் செல்ல அனுமதி மறுப்பு

Saturday, May 22, 2010
வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கு இன்று தாம் மேற்கொள்ளவிருந்த விஜயத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சற்று முன் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவுகளுக்கு அமைவாகவே இதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கூட்டமைப்பின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மணி நேரம் நடுவீதியில் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் 12 உறுப்பினர்களும் செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கும், வவுனியா பிரதேச தடுப்பு முகாம்களுக்கு இன்று செல்லவிருந்தனர்.
செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, மன்னாரில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் இடங்களுக்கு தாம் தற்போது சென்றுகொண்டிருப்பதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய விமான விபத்தில் 160 பேர் பலி

Saturday, May 22, 2010
தென்னிந்தியாவின் மங்களூர் விமான நிலையத்தில் எயார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
துபாயிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் கர்நாடக மாநிலத்தின் மங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை 6 மணியளவில் தரையிறங்க முயன்றபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன் தீப்பற்றிக்கொண்டதாக விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரொய்டர் செய்தி கூறுகிறது.
இந்த விமானத்தில் 163 பயணிகளும் 6 விமானப் பணியாளர்களும் இருந்ததாகவும் இவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாமெனவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 160 என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி எஸ் ஆச்சார்யா உறுதிப்படுத்தியுள்ளார்.

Friday, May 21, 2010

நிவாரணப் பணிகளில் கடற்படையினர்

Friday, 21 May 2010
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 300 படகு ஓட்டுநர்களைக் கடற்படையினர் அனுப்பிவைத்துள்ளனர்.
இவர்கள் 30 குழுக்களாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் கூறினார்.
கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மாரவிலை ஆகிய பகுதிகளில் கடற்படைப் படகோட்டுனர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் கடற்படைக்குச் சொந்தமான 28 படகுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க நேற்று கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிவாரணப் பணிகளில் ஈடுபடும் கடற்படையினர் குறித்து ஆராய்ந்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் என்கிறார் அமைச்சர்

Friday, 21 May 2010
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ எச் எம் பௌசி தெரிவித்துள்ளார்.
வெள்ளம் வடிந்தோடியதன் பின்னர் இந்த நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்படுமென அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லையெனச் சிலர் வதந்திகளைப் பரப்புவதாகவும் இது உண்மையல்லவெனவும் அவர் சொன்னார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் முயற்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தினால் உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் பௌசி கூறினார்.
அத்துடன் நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 25 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதெனவும் மேலும் 55 மில்லியன் ரூபா நிதி அமைச்சிடம் உள்ளதாகவும் அமைச்சர் பௌசி தெரிவித்தார்.
முற்றாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்கவும் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
நிலைமை வழமைக்குத் திரும்பியதன் பின்னர் பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அது குறித்து அமைச்சிடம் முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாமென அமைச்சர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மூன்று கட்டங்களாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மரினா மொஹமட் கூறினார்,
இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகப் பிரதேச செயலாளர்களும் கிராம உத்தியோகத்தர்களும் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

Thursday, May 20, 2010

புலி சந்தேக நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

Thursday, May 20, 2010
கொழும்பு நகரில் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெடி பொருட்களைக் கொண்டுவந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுக்களை சந்தேக நபர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் லிங்கம்பத்மநாதன் என்ற சந்தேக நபருக்கே இந்த கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2008 செப்டம்பர் மாதம் 27ம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினமொன்றில் ரி.என்.ரி மற்றும் சி 4 ரக வெடிமருந்துகளைக் கொண்டுசென்றார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டார்

பணிப்பாளர் தேர்வில் கலந்து

Thursday, May 20, 2010

செலிங்கே இன்ஷூரன்சின் அடுத்த பணிப்பாளருக்கான தெரிவு இடம்பெறும் போது தான் கலந்துக்கொள்ளப் போவதில்லை என லலித் கொத்தலாவல தெரிவித்துள்ளார். லலித் கொத்தலாவலவின் தற்போதைய பதவிக்காலம் மே மாதம் 28ம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது

Wednesday, May 19, 2010

சீரற்ற காலநிலை! சுமார் 4 லட்சம் பேர் பரிதவிப்பு!!

Wed, 19/05/2010
பாதிப்படைந்துள்ளன சீரற்ற கால நிலை காரணமாக 89,725 குடும்பங்களைச் சேர்ந்த 392,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கிறது.
சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இயற்கை அனர்த்தம் காரணமாக 1,555 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.
மிக மோசமாகப் பாதிப்படைந்த கொழும்பு மாவட்டத்தில் 142,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகிறது.
கம்பஹா மாவட்டத்தில் 115,031 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 37,605 பேரும், காலி மாவட்டத்தில் 94,971 பேரும் சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்துள்ளதாக நிலையம் தெரிவிக்கிறது.
இம்மாவட்டங்கள் தவிர காலி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், திருகோணமலை, மாத்தறை, மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களும்

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

Wed, 19/05/2010
மழை வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க, குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வு எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டபோதே இது தொடர்பான தீர்மானமெடுக்கப்பட்டதாக அமைச்சர் ஏ எச் எம் பௌஸி தெரிவித்தார்.
நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சொன்னார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 தினங்களுக்குச் சமைத்த உணவு வழங்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மரீனா மொஹமட் தெரிவித்தார்.
இதன் பின்னர் அவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்படுமென அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகக் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரால் ஆய்வுசெய்யப்படவுள்ளது.
ஆகக் கூடுதல் நிவாரணமாக 50 ஆயிரம் ரூபா வரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்கம் இன்னமும் மிரட்டல்: இந்தியா

Wed, 19/05/2010
புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு இன்னமும் மிரட்டலாக உள்ளதாகப் புதுடெல்லி தெரிவித்துள்ளது.
இலங்கையில் சென்ற ஆண்டில் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டதற்கு இந்தியத் தலைவர்களே காரணம் என்று புலிகள் அமைப்பு குறைகூறி வருகிறது என்று இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பு தெரிவிக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் இறை யாண்மைக்கு இன்னமும் தொடர்ந்து ஒரு மிரட்டலாகவே இருந்து வருகிறது,” என்று அந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.
புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் ஒழித்துவிட்டது என்ற போதிலும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் மீண்டும் ஒன்று திரள்கிறார்கள்.
தனித் தமிழ் ஈழத்தை அமைக்க அவர்கள் மறுபடியும் ஒன்று கூடுகிறார்கள்” என்றும் அந்த அரசு இதழ் தெரிவிக்கிறது.
இலங்கைப் போரில் உயிர் தப்பிய புலிகள் இயக்கத்தினர், தங்களைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் என்றே இந்திய அரசாங்கத்தைக் கருதுகிறார்கள்.
இந்திய அரசையும் இலங்கை அரசையும் விரோதிகளாக நினைக்கும் அவர்கள் பழிக்குப் பழி வாங்க விரும்புகிறார்கள்” என்றும் அந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அத்தகைய போராளிகள், இந்தியாவைக் குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பயன்படுத்தி மறுபடியும் ஒன்று திரண்டு தாக்குதலைத் தொடங்கக்கூடிய சாத்தியத்தை மறுக்க முடியாது,” என்றும் அந்த அறிவிப்பு கூறியது.
புலிகள் அமைப்பின் தலைவர்களும் போராளி களும் ஆதரவாளர்களும் இந்தியாவின் இலங்கை கொள்கையை வெறுக் கிறார்கள் என்றும் இந்திய அரசிதழ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டதை அடுத்து, அதற்கு அடுத்த ஆண்டான 1992ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தியா தடை செய்தது.
அந்தத் தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவையாக இதுவரை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன் புலிகளுக்கு எதிரான தடையை நீட்டித்து இந்திய அரசு அறிக்கை வெளி யிட்டது. அதையொட்டி இப்போதைய அரசு இதழ் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே இலங்கையில் அவசரகால பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவர் என இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Tuesday, May 18, 2010

பயணிகளுக்கு வேண்டுகோள்

May 18, 2010
கொழும்பு பிரதேசத்திற்கும் கட்டுநாயக்க விமான நிலைய பாதைக்குமிடையில் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கின் காரணமாக பயணிகள் விமான நிலையத்தை வந்தடைய தாமதமடைவதாகவும், அவர்களை பயண நேரத்தின் நான்கு மணித்தியாலயங்கள் முன்பு விமான நிலையத்தை வந்தடையுமாறும் ஸ்ரீ லங்கா எயர் லைன்ஸ கேட்டுக் கொண்டுள்ளது.

கீழ் குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு விமான சேவைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ லங்கா எயர் லைன்ஸ பொது இலக்கம் : 019733 5555



விமான சேவை விபரம் : 019733 2377

பாராளுமன்ற கூட்டத்திலும் காலநிலை செல்வாக்கு

Tuesday, May 18, 2010
இன்று பாரளுமன்ற கூட்டத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டதற்கிணங்க இன்று மாலை 1.55 மணியளவில் பாராளுமன்ற கூட்டம் நிறுத்தப்பட்டு. நாளை காலை மீண்டும் கூடயிருப்பதாக உதவி பாரளுபமன்ற சபாநாயகர் பிரியங்கரா அறிவித்துள்ளார்.

Sunday, May 16, 2010

பிரான்ஸ் உதவியூடன் இலங்கையில் சேலைன் உற்பத்தி!

Sunday, 16 May 2010
இலங்கையில் சேலைன் உற்பத்தி செய்யூம் நடவடிக்கைகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட்டு விடுமென்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சேலைன் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை ஆரம்பிப்பதற்கான சகல அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு விட்டதாகவூம் அடுத்த ஆறு மாத காலத்தினுள் பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடுமென்றும் அமைச்சர் சிறிசேன தெரிவித்தார்.
சேலைன் உற்பத்திக்கென பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து 6.4 மில்லியன் யூ+ரோ கடனாகக் கிடைக்கப்பெற்றுள்ளது. தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்க பிரான்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதன்படி ஒரு வருடத்திற்குத் தேவையான 7.2 மில்லியன் சேலைன் போத்தல்களை உற்பத்தி செய்வதே சுகாதார அமைச்சின் இலக்காகும். இதுவரை சேலைன் போத்தல்களை இறக்குமதி செய்யவென வருடாந்தம் 260 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டு வருகிறது.
இதேவேளை அரசாங்க வைத்தியசாலைகளில் சேலைன் பற்றாக்குறையை நிவர்த்திக்கவென விமானப்படை விமானம் மூலம் 37 ஆயிரம் கிலோ சேலைன் இந்தியாவிலிருந்து தருவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறை மா அதிபரின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

Sunday, 16 May 2010
காவல்துறை மா அதிபரின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை மா அதிபரின் பதவிக் காலம் ஒரு வருடத்தினால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 3ம் திகதி ஆறு மாத கால அடிப்படையில் மஹிந்த பாலசூரிய காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
சேவை நீடிப்பு வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து நடமாடும் காவல்துறை சேவையொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

Sunday, 16 May 2010
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிறைன் எட்கின் தலைமையிலான குழுவினருக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி மற்றும் அரசாங்க அதிபர் கே.கணேஷ் ஆகியோருடன் சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.
அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போத அரசாங்க அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதி அதிகாரிகளின் விஜயம் வழமையானதென மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்த போதிலும், இலங்கை;கு மூன்றாம் கட்ட கடனை வழங்குவது தொடர்பிலான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் நடைபெறுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Saturday, May 15, 2010

உலகில் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் நாமே : இராணுவத் தளபதி

Saturday, May 15, 2010
உலகில் எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததில்லை. நாம் அதனைச் செய்திருக்கிறோம். பயங்கரவாதத்தை தோற்கடித்தமை தொடர்பில் எமது அனுபவங்களை வேறு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளவும் நாம் தயாராக இருக்கிறோம் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் உடல் அவயங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து இராணுவத்தினரின் பங்களிப்பினாலும் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது. தாய்நாட்டுக்காகத் தமது உடற்பாகங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துமுகமாக இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம்" என அவர் மேலும் கூறினார்.
பிரேவ் ஹார்ட்' செயற்திட்டத்தின் மூலம் அநுராதபுரத்திலுள்ள அங்கவீனமுற்ற 200 இராணுவ வீரர்களுக்கு இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்

நுவரெலியா தோட்டத்தில் ரோனடோ சு+றாவளி!

Saturday, May 15, 2010
நுவரெலியா நெஸ்லி தோட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட ரோனடோ சு+றாவளியினால் ஆறு வீடுகள் சேதமடைந்ததோடு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 36 வயதுடைய உதயகுமார் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இலேசான மழை பெய்து கொண்டிருந்தது. நண்பகல் இரண்டு மணியளவில் திடீரென ரொனடோ சுழல்காற்று ஏற்பட்டது. இதில் வீடுகள் தூக்கி வீசப்பட்டதோடு மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டன.
இந்த வேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த உதயகுமார் மீது வீட்டுச் சிதைவூகள் மோதி வெட்டியதிலேயே உயிரிழந்தாரென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
நுவரெலியா மாவட்ட எம்.பி. வே. இராதாகிருஷ்ணன் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவூ வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்,

Friday, May 14, 2010

ஜீ-15 மாநாட்டின்; தலைமைப் பதவி இலங்கைக்கு

Friday, 14 May 2010

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும். ஜீ- 15 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இரான் பயணமாகவூள்ளாh;.
ஜனாதிபதியின் தலைமையில் விஷேட குழு ஒன்றும் பங்குபற்ற உள்ளது.
இன்று முதல் 17 ஆம் திகதி வரை ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக்குழு இன்று தெஹ்ரான் பயணமாகவூள்ளது.
ஜீ- 15 நாடுகளின் தலைமைப் பதவி இம்முறை இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. தற்பொழுது ஜீ-15 நாடுகளின் தலைமைப் பதவியை ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் வகிப்பதோடு மேற்படி தலைமை பதவி நாளைஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்க ப்படவூள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
ஜனாதிபதியூடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அடங்கலான உயர்மட்டக் குழு தெஹ்ரான் செல்ல உள்ளது. இலங்கை ஜனாதிபதி ஈரான் உட்பட பல நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவூம் அவர் கூறினார்

Followers

Blog Archive