Thursday, August 5, 2010

பிரபா கணேசன். திகாம்பரம் அரசாங்கத்துடன் இணைந்தனர்.

Thursday, August 05, 2010
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து ஆளுங் கட்சியூடன் இணைந்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி கண்டிப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினரான அப்துல் காதா; ஏற்கனவே அரசாங்கத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுக்கொள்ள இன்னும் மூன்று அங்கத்தவா;களே தேவைப்படுகின்றனா; எனவூம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வரலாற்றில் முதற் தடவையாக 63 நீதிமன்றங்களை புதிதாக உருவாக்கியூளளதாக நீதியமைச்சர் அதாவூத செனவிரத்ன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்¨
Thursday, August 5, 2010
வழக்கு விசாரணைகளை வரலாற்றில் முதற் தடவையாக 63 நீதிமன்றங்களை புதிதாக உருவாக்கியூளளதாக நீதியமைச்சர் அதாவூத செனவிரத்ன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளு மன்றத்தில் நேற்று நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே நீதியமைச்சர் அதாவூத செனவிரட்ன இவ்வாறு தெரிவி த்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

நீதிமன்றங்களில் பெருந்தொகையாகக் குவிந்து கிடக்கின்ற வழக்குகளை இரண்டு வருடத்திற்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலதிக நீதிமன்றங்களை இரண்டு வருடங்களுக்கென மாவட்ட ரீதியில் அமைத்து தேங்கிக் கிடக்கின்ற வழக்குகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை காலம் உச்ச நீதிமன்றங்களில் மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனித உரிமை தொடர்பான வழக்குகளை எதிர்வரும் காலங்களில் மாகாண மேன் முறையீட்டு நீதிமன்றங்களிலும் விசாரிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

வழக்கு விசாரணைகளின் தாமதம் மற்றும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்தும் வகையில் 60 மேல் நீதிமன்ற நீதியரசர்களை நியமிப்பதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

எனினும் இத்தொகையை 75 ஆக அதிகரிப்பதற்கான திருத்தமே இச்சட்டமூலத்தினால் கோரப்படுகிறது. குவிந்து கிடக்கின்ற வழக்குகளைத் தீர்ப்பதற்காக வரலாற்றில் முதற் தடவையாக 63 நீதிமன்றங்களை புதிதாக உருவாககப்பட்டுள்ளது.

தொழில் நியாயாதிக்கச் சபைகளை சகல நகரங்களுக்கும் விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நீதவான்; நீதிமன்றங்கள் தற்போது அரை நாட்களே நடைபெறுகின்றன. இதன் நேரத்தை அதிகரிக்கவூம் நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும் சட்டமா அதிபர் சட்டத்தரணிகள் நீதிபதிகள் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடக்கும் வழங்குகளை இரண்டு வருடங்களுக்குள் முடிவூக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவூம் அமைச்சர் தெரிவித்தார்

Sunday, August 1, 2010

பாடசாலை மாணவர் மத்தியில் அதிகரிக்கும் போதைப் பழக்கம்!

Sunday, August 1, 2010
இலங்கையில் தற்போது போதைப் பொருள் பாவனையின் வீதம் அதிகரித்தவண்ணமே உள்ளது. போதைப் பொருளை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்படினும் பல்வேறு சட்டங்கள் இருப்பினும் அதனை முற்றாக ஒழித்துக்கட்ட முடியாதுள்ளது.

அதேவேளை பாடசாலை மாணவர்களும் இப் போதை பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். இதன் வீதம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

கொழும்பு நகரில் மாத்திரமல்லாது அதிகளவில் பொலன்னறுவை மாவட்டத்திலும் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகயுள்ளமை தெரிய வந்துள்ளது.

பொலன்னறுவயில் கடந்த 17ஆம் திகதி 3 மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் போதைப் பொருளை வைத்திருந்தார்கள் என்பதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பாடசாலை செல்லும் இளம் வயது சிறார்கள் சிகரட் மற்றும் போதை ஏற்படுத்தும் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

இளம் வயதினரில் 13 தொடக்கம் 20 வயதிற்கிடைப்பட்ட மாணவர்கள் பலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறு இளம் வயதினர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதற்கு அவர்களின் நண்பர்களே முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இவ்வாறானவர்களில் 88.2 வீதமானவர்கள் நண்பர்கள் மூலமும் 10 வீதமானவர்கள் உறவினர்கள் மூலமும் 1.8 வீதமானவர்கள் உல்லாசப் பயணிகள் மூலமும் போதைக்கு அடிமையாகின்றனர்.

நாட்டின் எதிர்காலம் வளரும் சமுதாயத்தின் கரங்களில் உண்டு என்பார்கள். ஆனால் இவ்வாறான நிலைமை தொடருமானால் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஆதலால் இளம் மாணவர்கள் போதைக்கு அடிமையாவது தடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கான பொறுப்பு எம் அனைவரையுமே சாரும் என்பதால் அனைவருடைய ஒத்துழைப்புடனும் சமுதாயத்தைக் காப்போம்.

சர்வதேச ரீதியில் இயங்கும் புலிகளை கைது செய்ய அரசு தயாராகவுள்ளது!

Sunday, August 1, 2010
புலிகள் இயக்கத்து டன் இணைந்து சர்வதேச ரீதியாக இயங்கும் எவரையும் கைது செய்வதற்கு தயாராக இருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புலிகள் உள் நாட்டில் அழிக்கப்பட்டிருப்பினும் சர்வதேச ரீதியாகத் தொடர்ந்து இயங்கி வருவதாக அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.இது தொடர்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக் ஸ்மன் குலுகல்ல தெரிவிக்கையில்,

புலிகளின் சர்வதேச செயற் பாடுகளைக் கட்டுப்படுத்த அவசியம் ஏற்படின் இன்ரல்போல் எனப்படும் சர்வதேச பொலி ஸாரையும் பயன்படுத்தவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேச ரீதியில் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற வகையில் அதனுடன் இணைந்து இயங்கும் எவரையும் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Saturday, July 31, 2010

இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம்: மத்திய மந்திரிசபை முடிவு.

Saturday, July 31, 2010
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மூத்த மந்திரிகள் பிரணா? முகர்ஜி, ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, எஸ்.எம். கிருஷ்ணா, சீடு. ராசா மற்றும் கேபினட் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலங்கையில் தமிழர் பகுதியான யாழ்ப்பாணம் நகரில் துணை தூதரகம் அமைப்பது என்று முடிவு எடுத்தனர்.

இதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியும் என்பதால் அங்கு துணை தூதரகம் அமைக்க முடிவு செய்தனர்.

ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்துவது என்றும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இலங்கையில் ‘ரூனா’ டின்மீன் தொழிற்சாலை.

Saturday, July 31, 2010
மாலைதீவூ ரூனா’ டின்மீன் தொழிற்சாலை யொன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு மாலைதீவூ அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்த மாலைதீவூ மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சர் ஷுஹஸைன் ரசீட் ஹசன்இ மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவூடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டது.

மாலைதீவிலுள்ள மூன்று பிரதான டின் மீன் கம்பனிகளில் ஒன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு மாலைதீவூ ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதன் படிஇ மாலைதீவூ அரசின் ஒத்துழைப்புடன் ரூனா டின் மீன் கம்பனி அமைக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

சார்க் நாட்டு மீன்பிடி அமைச்சர்கள் பேச்சு நடத்தி வலய கடற் பரப்பில் மீன் வளத்தை முகாமைத்துவம் செய்யவூம் மீன் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டார்.

மேலைத்தேய நாட்டு மீனவர்கள் எமது கடற் பிராந்தியத்தில் சட்ட விரோதமான முறைகளில் மீன் பிடிப்பதை தடுக்க வலய நாடுகள் இணைந்து செயற் பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையிலுள்ள நாரா நிறுவனத்தினூடாக மாலைதீவூ மீன்பிடித்துறை சார் ஆய்வூகளில் தொடர்புபட்டுள்ளவர்களுக்கு பயிற்சி வழங்க எதிர்பார்ப்பதாக மாலைதீவூ அமைச்சர் கூறினார்

Thursday, July 29, 2010

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் ‐ யசூசி அக்காசி ‐ அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் இலங்கை, ஜப்பானுக்கு விளக்கம்.

Thursday, July 29, 2010
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காசி தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருடனான பேச்சுவார்த்தையின் போது அக்காசி இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மக்கள் நிலைமை, புனர்நிர்மாணப் பணிகள், அவசரகாலச் சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளமை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நியமனம் போன்ற விடயங்கள் குறித்து இரண்டு அமைச்சர்களும், யசூசி அக்காசிக்கு விளக்கமளித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் எனவும், தற்போதைய சூழ்நிலை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அக்காசி தெரிவித்துள்ளார்.


அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் இலங்கை இமைச்சர்கள், ஜப்பானிய அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் ஜப்பானிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் தற்போது ஜப்பானில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜப்பானிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கியுள்ளனர்.

தமிழ்க் கட்சிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்ட கடிதம் அனுப்பி வைப்பு!

Thursday, July 29, 2010
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுபிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் தி.சிறீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும், இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும்; இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் துயரங்களையும், அவலங்களையும் கருத்திற்கொண்டு தமிழ்பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் இணைந்து செயற்பட வேண்டுமென்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது தமிழ்க் கட்சிகள் அனைத்தினது கடமையென்றும், இந்தவகையில் நீண்டகால பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், உடனடியாக எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஆக்கபூர்வமாக உதவுவதற்கும் தமிழ்பேசும் அரசியல் சக்திகள் ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டுமென்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும்; ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் கலந்துரையாடி ஒருமித்த நிலைப்பாட்டை அடைய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி இதுவிடயமான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துகொள்ளச் செய்வதற்காக, கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதமொன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Sunday, July 25, 2010

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை.

July 26, 2010
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் மாதம் புதுடெல்லிக் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் விஜயம் செய்ய உள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இலங்கை உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்திய அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் ஏனைய புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துயாடப்படவுள்ளது. ஆகஸ்ட் மாத நடுப்பகுதியளவில் இந்த விஜயம் நடைபெறலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். பெசில் ராஜபக்ஷ தலைமையிலான இதே இராஜதந்திர குழு கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலும் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அகதி அந்தஸ்து வழங்குவது குறித்து சர்வதேசத்திற்கு இலங்கை எச்சரிக்கை.

July 26, 2010
துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறோம் என்ற உணர்வு ரீதியான கோரிக்கைகளின் அடிப்படையில் புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கப்படுவது சட்டவிரோத குடியேற்றத்தையே ஊக்குவிக்கும் என சர்வதேச சமூகத்தை இலங்கை அரசாங்கம் எச்சரித்துள்ளது.

வியட்நாமில் நடைபெற்ற ஆசியான் பிராந்திய அமைப்பின் 17 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆழ்கடலில் கடத்தல்களை - குறிப்பாக சிறிய படகுகளில் ஆட்களையும் பொருட்களையும் கடத்துவதை - முறியடிப்பதற்கு இலங்கை கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

துன்புறுத்தப்படுவதான உணர்வின் அடிப்படையில் அகதி அந்தஸ்து வழங்குவது சட்டவிரோத குடியேற்றத்தையே குடியேற்றத்தையே ஊக்குவிக்கும். எனவே பாதுகாப்பு வலையமைப்பு, பிராந்திய கடற்பரப்புகளில் காவலில் ஈடுபடுதல் ஆகியவற்றினால் சட்டவிரோத இடப்பெயர்வுகளையும் சட்டவிரோத வர்த்தகத்தையும் தடுக்க முடியாது எனவும் அவர்பிரதியமைச்சர் குணவர்தன கூறினார்.

பயங்கரவாத அமைப்புகளிடம் எல்லைகளை ஊடறுத்துச் செல்லும் ஆற்றலும் நவீன தொழில்நுட்பங்களும் இருப்பதாகக் கூறிய அவர் புலம்பெயர்ந்தவர்களின் குழுக்கள் மற்றும் அனுதாபிகளின் நிதியளிப்புச் செயற்பாடுகள் உட்பட பயங்கரவாதிகளின் நாடுகடந்த செயற்பாடுகளை தடுப்பதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் எனக் கூறினார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை!

July 26, 2010
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் மாதம் புதுடெல்லிக் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் விஜயம் செய்ய உள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இலங்கை உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்திய அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் ஏனைய புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துயாடப்படவுள்ளது.

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியளவில் இந்த விஜயம் நடைபெறலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.

பெசில் ராஜபக்ஷ தலைமையிலான இதே இராஜதந்திர குழு கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலும் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 21, 2010

தோழர் வரதராஐப்பெருமாள் அளவெட்டி கச்சாய் சாவகச்சேரி கிளாலி மக்களோடு மக்களாய்

Wednesday, July 21, 2010

இலங்கைக்கு அளித்த நிதியை கண்காணிக்க குழு.

Wednesday, July 21, 2010
இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு அளித்த நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதை அறிய அதிகாரிகள் குழு அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தத் தகவலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்க உள்ளது. இதையொட்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது,

இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணியை விரைவாக கால தாமதம் இன்றி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் மறு குடியேற்றத்துக்காக அவர்களுக்கு வீடு கட்டித் தரவும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு மூலம் ரூ.500 கோடி அளித்ததுடன், 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்திய அரசால் வழங்கப்பட்ட இந்தத் தொகை எந்த அளவுக்கு முறையாக செலவழிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கையில் மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையைக் கண்டறியவும் தூதரகம் மூலமாகவோ அல்லது சிறப்புத் தூதரை அனுப்புவதன் மூலமாகவோ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை கூறியிருந்தார்.

இதை உடனடியாக செயல்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது,

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை அறிந்திட, அதிகாரிகள் குழு நியமிக்கப்படும். இந்தக் குழுவை அங்கு அனுப்புவதற்கு முறைப்படியான அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், அடிப்படை வசதிகள் அற்ற இடைக்கால முகாம்களிலேயே வசிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியில் சிங்களர் குடியேற்றத்தை விரைவுபடுத்தவும் மகிந்த ராஜபட்ச அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழர் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையையும் சீனாவுக்கு இலங்கை தாரை வார்த்துள்ளது. இலங்கைக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சீனா ஆழமாக காலூன்றி வருகிறது. இது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பேராபத்தாக முடிய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் பிரதமர் மன்மோகன் சிங், முக்கியமான மத்திய அமைச்சர்களை சந்தித்த இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு இந்தியா தலையிட்டால்தான் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா - இலங்கை இரு தரப்பு உறவு பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை.

Wednesday, July 21, 2010
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளெக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற ஜனாதிபதியுடனான ரொபர்ட் பிளெக்கின் சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் திறைசேரி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோரும் கலந்துகொண்டனர் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.

இதேவேளை, இலங்கை அதிகாரிகளுக்கும் ஏனையோருக்கும் அமெரிக்காவில் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் கூறியது.

Saturday, July 17, 2010

அரசாங்கத்திற்குக் கூட்டு ஆலோசனை.

Saturday, July 17, 2010
மலையகப் பெருந்தோட்டங்களில் அரச நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக, தொழிற்சங்க மற்றும் அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்குக் கூட்டு ஆலோசனையொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளன.

பெருந்தோட்டங்களை அரச நிர்வாகத்தின் கீழ் உள்வாங்கும் வகையில் புதிய கிராம சேவையாளர் பிரிவுகளும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் முன்மொழியப் பட்டுள்ளதோடு இது தொடர்பான பொதுவான கூட்டறிக்கை இம்மாத இறுதிக்குள் எல்லை மீள் நிர்ணய குழுவுக்குக் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை கொழும்பிலுள்ள �இலங்கை மன்றக் கல்லூரி�யில் நடைபெறுகிறது.

இதில் மலையகத்தில் இயங்கும் சகல அமைப்புகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக எல்லை மீள்நிர்ணயம் தொடர்பாக மலையக அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரான பீ. பீ. தேவராஜ் தெரிவித்தார்.

அரசியல் கருத்தியலுக்கு அப்பால் சமூக நலச் சிந்தனையை நோக்காகக் கொண்டு பொதுவான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துச் செயற்படுத்தி வருவதாகக் கூறிய அவர், மலையகத்தின் முன்னணி அரசியல், தொழிற்சங்க அமைப்புகளும் இது விடயத்தில் பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகக் கூறினார்.

காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்து கிராம சபை கட்டமைப்பிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்ட மலையக சமூகம் இதுவரை காலமும் அரச நிர்வாகத்திலிருந்தும் புறந்தள்ளப்பட்டிருக்கின்றது. தோட்ட அதிகாரியே இந்த மக்களின் நிர்வாகியாக இருந்து வருகிறார்.

எனவே, சமத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் வகையில், யதார்த்த நிலையினின்று புதிய ஆலோசனைகளை வரைந்துள்ளோம். இதில் இனரீதியான சிந்தனைப் போக்கு கிடையாது. நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையிலேயே இந்த ஆலோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது என்று தெரிவித்த தேவராஜ், நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன் தற்காலிக ஏற்பாடாக கிராம சேவையாளர் பிரிவுகள் பலவற்றைப் புதிதாகப் பிரேரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய ஏற்பாட்டின்படி 350 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவையாளர் பிரிவொன்றை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தோட்டங்கள் தற்போது சிறு நகர பிரதேசத்திற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், தோட்டத்திற்கொரு கிராம சேவையாளர் பிரிவை ஏற்படுத்தும் வாய்ப்பு இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைக்கு நுவரெலியாவிலும் கொழும்பு வடக்கிலும், மேலதிக பிரதேச செயலகப் பிரிவுகளைக் கோருவதற்கும் விரிவான ஆய்வுக்குப் பின்னர் சனத்தொகை, நிலத்தொடர்பு முதலான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆலோசனைகள் முன்வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தேவராஜ் மேலும் தெரிவித்தார்.

மீண்டும் இலங்கை வருகிறார் நீல் புஹ்னே.

Saturday, July 17, 2010
இலங்கைக்காக ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும் மனிதத்துவ இணைப்பாளருமான நீல் புஹ்னே கடந்தவாரம் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனின் விஷேட செய்தியுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக ஐ.நா.சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனுக்கு இலங்கை நிலைவரம் பற்றியும் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலர்களின் நிலைமை பற்றியும் நீல் புஹ்னே எடுத்துக்கூறியிருக்கிறார். 2009ஆம் ஆண்டு ஐ.நா. சபையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் கலந்தாலோசித்திருக்கிறார்கள்.

திருப்பியழைக்கப்பட்ட நீல் புஹ்னே எதற்காக மீண்டும் இலங்கைக்கு செல்கிறார் என பேச்சாளரிடம் கேட்டபோது… இலங்கையில் இப்பொழுது அரசாங்கத்தின் சாதகமானநிலை தென்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள ஐ.நா. பணியாளர்கள் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் பணிபுரிகிறார்கள். இதனைக் கருத்திற்கொண்டே புஹ்னே மீண்டும் இலங்கை செல்லவுள்ளார் என்று குறிப்பிட்டார்.

மன்னாரில் இலவச மருத்துவ முகாம்.

Saturday, July 17, 2010

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்காக நாற்சதுர சுவிசேஷ சபையின் அனுசரணையில், இலங்கை இராணுவம் - சுகாதார அமைச்சுடன் இணைந்து நடாத்தும் இலவச வைத்திய முகாம் உயிலங்குளம், மல்லாவி, பூனகரி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றது.

மேலும் 19ஆம் திகதி நெடுங்கேணியிலும், 20ஆம் திகதி ஒட்டிசுட்டானிலும், 22 முதல் 24ஆம் திகதிவரை வரை நட்டான்கண்டலிலும் நடைபெறவுள்ளது. இவ் மருத்துவ முகாமிற்காக விசேட மருத்துவ குழு ஒன்று அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, சுவிஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் நமது நாட்டின் மருந்துவர்களும் கலந்துகொள்வர்.

ஏற்கனவே இவ்வமைப்பினர் தமது மருத்துவ முகாம்களை திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் நடத்தியிருந்தனர். நான்காவது முகாமாக மன்னாரில் இப்பொழுது நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது

Wednesday, July 14, 2010

பழம்பெரும் தொழிற்சங்கவாதியும், மேல் மாகாண ஆளுநருமான அல்ஹாஜ் அலவி மௌலானா அவர்களுடனான சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பொருமாள்



Wednesday, July 14, 2010
பழம்பெரும் தொழிற்சங்கவாதியும், மேல் மாகாண ஆளுநருமான அல்ஹாஜ் அலவி மௌலானா அவர்களுடனான சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பொருமாள்

பிரான்சில் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.


Wednesday, July 14, 2010
பிரான்சில் சார்சல் என்னும் இடத்தில் 11.07.2010 அன்று மாலை 4 மணியிலிருந்து மாலை 7.30 மணிவரை தியாகிகள் தின நிகழ்வுகள் நடைபெற்றன. தோழர் ஜோதியின் வரவேற்புரையைத் தொடர்ந்து போராட்டத்தில் இதுவரை காலமும் மரணித்த மக்களுக்காகவும் போராளிகளுக்காகவும் இரண்டு நிமிட அஞ்சலிகள் செலுத்தப்பட்டன. மறைந்த தோழர் புஸ்பராஜா அவர்களின் துனைவியார் மீரா புஸ்பராஜா மங்களவிளக்கேற்றினார். முன்னைநாள் EPRLF அரசியல் செயற்பாட்டாளரும் தோழர் பத்மநாபாவின் நண்பருமான தோழர் கணேசமூர்த்தி தோழர் பத்மநாபாவின் உருவப்படத்திற்கு மாலையணிவித்தார். தொடர்ந்து அஞ்சலிக்கூட்டம் தோழர் கொட்வின் தலைமையில் நடைபெற்றது.

ஜேர்மன் கிளையின் சார்பாக தோழர் அலெக்ஸ் உரையாற்றும்போது 20 வது தியாகிகள் தினத்தினை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வோம். ஏனேனில் அவர்கள் உயரிய இலட்சியங்களுக்காக போராடியவர்கள். அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை முன்னெடுத்து செல்வதே தோழர்களாகிய நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகுமென்று கூறினார்.

EPDP யின் பிரான்ஸ் கிளை சார்பாக தோழர் தமிழ் நேசன் உரையாற்றும்போது நான் தோழர் நாபாவை நேரில் பார்த்ததில்லை ஏனேன்றால் நான் வயதில் மிகவும் சிறியவனாக இருந்தேன். ஆனால் நான் நேசிக்கின்ற தலைவர் அவர்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார். அதிலிருந்து அவர் எவ்வகையான தலைவராக இருந்திருப்பார் என்பதை என்னால் உணரமுடிகின்றது. கூட்டத்தில் பேசக்கிடைத்தால் ஐக்கியத்தை வலியுறுத்தி பேசுங்கள் என்று எனது தலைவர் கூறினார் என்றும் தெரிவித்தார்.

சுவிஸ் கிளையின் சார்பாக தோழர் பெர்னாண்டோ உரையாற்றும்போது நான் நீண்ட காலமாக தோழர் நாபாவுடனும் ஏனைய மறைந்த தோழர்கள் பலருடனும் அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கின்றேன். அந்த தோழர்களுடன் இணைந்து பணியாற்றிய காலங்களை என்னால் மறக்க முடியவில்லை. அவர்களை எங்கள் நெஞ்சங்களில் பூஜிக்கின்றோம். அவர்கள் கண்ட தொலைதூரக் கனவுகளை நனவாக்குவோம் என்று கூறினார்.

அரசியல் செயற்பாட்டாளரும், கவிஞருமான தோழர் அருந்ததி உரையற்றும்போது. ஈழப் போராட்ட வரலாற்றில் EPRLF கட்சி மட்டும்தான் ஜனநாயக பண்புகளுடன் சமுகத்திலிருக்கின்ற சாதிரீதியாக, வர்க்கரீதியாக ஒடுக்கு முறைக்கு உள்ளானவர்களை அணிதிரட்டியது. மக்களின் எதிர்காலம் தொடர்பாக தீர்க்கதரிசனத்துடன் முடிவுகளை எடுத்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று மேலும் நமது உரிமைகளை படிப்படியாக வெண்றெடுக்க வேண்டுமென்ற தோழர் நாபாவினதும் அவரது கட்சியினதும் முடிவுகள் எவ்வளவு தீர்க்கதரிசனமானது என்பதை இன்றைய நிலமைகளிலிருந்து உணரக்கூடியதாகவுள்ளது. EPRLF கட்சியானது எதிர்காலத்தில் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையையும் விடுத்தார்.


இடதுசாரி செயற்பாட்டாளரான தோழர் லோகநாதன் ஆசிரியர் உரையாற்றும்போது நான் இவ்வருடம் ஜெர்மனி, சுவிஸ், பிரான்ஸ் போன்ற இடங்களில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வுகளில் பங்குபற்றியதில் நான் சந்தோசமடைகின்றேன். ஏனெனில் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் படிப்படியான முன்னேற்றத்தை காணக்கூடியதாகவிருந்தது. அவர்களிடம் காணப்படும் தோழமையும், ஒற்றுமையான செயற்பாடுகளும் தோழர் நாபா எப்படியான தலைமைப் பண்பைக் கொண்டிருந்திருப்பார் என்பதை என்னால் உணரமுடிகின்றது. EPRLF தோழர்களால் உண்மையான ஐக்கியத்தையும் மக்களுக்கான சுபிட்சமான எதிர்காலத்தையும் உருவாக்கமுடியும் என்று தான் நம்புவதாக கூறினார்.

JVP யின் செயற்பாட்டாளர் நந்தன குணசிங்கா உரையாற்றும்போது தோழர் நாபாவை 70 களிலிருந்து அவருடைய செயற்பாடுகளை பார்த்திருக்கின்றேன். அந்தக் காலத்தில் வடகிழக்கில் மட்டுமல்லாது தென்னிலங்கையிலும் இடதுசாரி முற்போக்கு சக்திகள் மத்தியில் சிறு சிறு கூட்டங்களை நடத்தியிருந்தார். அவருடைய சிந்தனையும் செயற்பாடுகளும் அனைத்து இனமக்களின் நலன் சார்ந்ததாகவே இருந்தது என்று குறிப்பிட்டார்.

TBC யின் அரசியல் ஆய்வாளரும், இடதுசாரி செயற்பாட்டாளருமான தோழர் சிவலிங்கம் அவர்கள் நீண்டதொரு சிறப்புரையை ஆற்றியிருந்தார். அவருடைய உரையில் நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை தீர்மானம், அரசியல் தீர்வை புறம்தள்ளிய அபிவிருத்தி, நாடளாவிய ரீதியில் ஜனநாயக விழுமியங்களை சிதைக்கின்ற செயற்பாடுகள், இராணுவ மயமாக்கல் போன்ற விடயங்களை உள்ளடக்கியிருந்தார். இலங்கையில் இவ்வகையான செயற்பாடுகள், அணுகுமுறைகள் அனைத்தும் நாட்டை மேலும் பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லும் என்று எச்சரிக்கை தொனியில் குறிப்பிட்டார். இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு , முழு இலங்கைக்குமான சுபிட்சமான எதிர்காலம் என்பதெல்லாம் நாட்டின் சகல துறைகளிலும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். அவருடைய பேச்சுக்கள் சபையிலுள்ளோரை சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்திருந்தது.

கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், சர்வதேசக் கிளைகளின் பொறுப்பாளருமான தோழர் சாந்தன் உரையாற்றும்போது நாம் இன்று பிரான்ஸில் 20 வது வருட தியாகிகள் தினத்தை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம். தோழர் பத்மநாபா போன்ற பல நூறு ஆற்றல் மிக்க தலைவர்களை இழந்திருக்கின்றோம். இவர்கள் அனைவரும் உயரிய இலட்சியங்களுக்காக தொலைதூரக் கனவுகளுடன் போராடப் புறப்பட்டவர்கள். இந்த மரணித்த தோழர்களுடன் நாம் இரவு, பகலாக கலந்துரையாடிய, விவாதித்த விடயங்களைத்தான் நாம் இலகுவில் மறந்துவிடத்தான் முடியுமா தோழர்களே? இவர்கள் சக மனிதர்களை மனிதனாக மதிக்க வேண்டுமென்று விரும்பியவர்கள். தமிழ் சமுகத்தில் இருக்கின்ற சகலவிதமான பிற்போக்கு தனங்களையும், ஏற்றத் தாழ்வுகளையும் நிராகரித்தவர்கள். எமது கட்சியானது இவ்வகையான விடயங்களில் எந்தவொரு சமரசத்திற்கும் இடம் கொடுக்காது செயற்படும் என்றும் தெரிவித்தார். கடந்த காலத்தில் எமது கட்சியுடன் இணைந்து பணியாற்றிய பல தோழர்களை பார்க்கின்றபோது எனக்கு பழைய நினைவுகளே என் கண்முன்னே வருகின்றன. இத்தோழர்கள் அனைவரினதும் அர்ப்பணிப்புக்களும் உழைப்புக்களும் பதிவு செய்யப்படவேண்டியவை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் தி.சிறிதரன்(சுகு) அவர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட தியாகிகள் தின செய்தி ஒன்று வாசிக்கப்பட்டது. கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் வட-கிழக்கு மாகாண முதலமைச்சரானதோழர் வரதராஜப்பெருமாள் அவர்களின் தியாகிகள் தின செய்திகள் மற்றும் அரசியல் நிலவரம் தொடர்பான விடயங்கள் தொலைபேசி மூலமாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.

மாவட்ட ரீதியாக மறைந்த தோழர்களின் விபரமும், புகைப்படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவ்வருடம் இலங்கை, இந்தியா, பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, சுவிஸ் போன்ற இடங்களில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வுகளின் புகைப்படங்களும் மக்களின் பார்வைக்குவைக்கப்பட்டிருந்தன. EPRLF இன் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக நேற்று இன்று நாளை என்னும் தலைப்பில் விபரணப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறியது.

பத்மநாபா EPRLF (பிரான்ஸ் கிளை.)

ஐ.நா மூவர் குழு அடுத்த வாரத்தினுள் கூடுகிறது,

Wednesday, July 14, 2010
இலங்கை தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் செயலாளரினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழு அடுத்த வாரத்துக்குள் நியூயோர்க்கில் கூட எண்ணியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.

தமது அமைப்பின் இலங்கைக்கான வதிவிட இணைப்பதிகாரி நீல் பூனே தற்போது நியூயோர்க்கில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் ஊடகப் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழு அடுத்த வாரத்துக்குள் நியூயோர்க்கில் கூடவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை உறுதியான திகதி நிர்ணயிக்கப்பட்டவில்லையெனக் கூறினார்.

நீல் பூனே தற்போது நியூயோர்க்கில் தங்கியிருப்பதாகவும், அவர் ஐக்கிய நாடுகள் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்றுவருவதாகவும் ஃபர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.

Followers

Blog Archive