Sunday, August 1, 2010

சர்வதேச ரீதியில் இயங்கும் புலிகளை கைது செய்ய அரசு தயாராகவுள்ளது!

Sunday, August 1, 2010
புலிகள் இயக்கத்து டன் இணைந்து சர்வதேச ரீதியாக இயங்கும் எவரையும் கைது செய்வதற்கு தயாராக இருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புலிகள் உள் நாட்டில் அழிக்கப்பட்டிருப்பினும் சர்வதேச ரீதியாகத் தொடர்ந்து இயங்கி வருவதாக அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.இது தொடர்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக் ஸ்மன் குலுகல்ல தெரிவிக்கையில்,

புலிகளின் சர்வதேச செயற் பாடுகளைக் கட்டுப்படுத்த அவசியம் ஏற்படின் இன்ரல்போல் எனப்படும் சர்வதேச பொலி ஸாரையும் பயன்படுத்தவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேச ரீதியில் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற வகையில் அதனுடன் இணைந்து இயங்கும் எவரையும் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive