Wednesday, August 18, 2010
வடபகுதிப் பாடசாலை மாணவர்களை இலவசக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டமொன்றை வட மாகாண சபை ஆரம்பித்துள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 பாடசாலை மாணவர்கள் இவ்வாறு வெளி மாவட்டங்களுக்கான இலவசச் சுற்றுலாவுக்கெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
இதன் முதற் கட்டமாகக் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் நாளை தமது சுற்றுலாவை ஆரம்பிக்கவுள்ளனர்.
தரம் 8 முதல் க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்கும் மாணவர்கள் இதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு 16 இலட்சம் ரூபா நிதியையும் வட மாகாண சபை ஒதுக்கியுள்ளது.
இலவச சுற்றுலாத் திட்டத்தின் கீழ் சுமார் எட்டு நாட்களுக்குக் குறிப்பிட்ட மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
சுற்றுலாவின் போது மாணவர்கள் பாராளுமன்றம், நூதனசாலை, உயர் கல்லூரிகள், அநுராதபுரம், காலி, மாத்தறை, கதிர்காமம், கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
வடபகுதிப் பாடசாலை மாணவர்களை இலவசக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டமொன்றை வட மாகாண சபை ஆரம்பித்துள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 பாடசாலை மாணவர்கள் இவ்வாறு வெளி மாவட்டங்களுக்கான இலவசச் சுற்றுலாவுக்கெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
இதன் முதற் கட்டமாகக் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் நாளை தமது சுற்றுலாவை ஆரம்பிக்கவுள்ளனர்.
தரம் 8 முதல் க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்கும் மாணவர்கள் இதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு 16 இலட்சம் ரூபா நிதியையும் வட மாகாண சபை ஒதுக்கியுள்ளது.
இலவச சுற்றுலாத் திட்டத்தின் கீழ் சுமார் எட்டு நாட்களுக்குக் குறிப்பிட்ட மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
சுற்றுலாவின் போது மாணவர்கள் பாராளுமன்றம், நூதனசாலை, உயர் கல்லூரிகள், அநுராதபுரம், காலி, மாத்தறை, கதிர்காமம், கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment