Wednesday, August 18, 2010

வன்னியில் ராணுவத்தினருக்கான தங்குமிடங்களே அமைக்கப்பட்டு வருகின்றன குடியேற்றங்கள் அல்ல என்கிறார் கோத்தாபய.

August ,19, 2010
யுத்த காலத்தில் புலிகள் பொதுமக்களின் சாதாரண ஆடைகளை அணிந்து தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்களையும் புலிகளையும் பிரித்து அறிவதில் சிக்கல் நிலைமை காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த சில தரப்பினர் யுத்த காலத்தில் தற்பாதுகாப்பிற்காக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், குறித்த குழுக்களின் ஆயுதங்கள் தற்போது களையப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

-------------------------------------------------------------------------------------
வன்னியில் ராணுவத்தினருக்கான தங்குமிடங்களே அமைக்கப்பட்டு வருகின்றன – குடியேற்றங்கள் அல்ல என்கிறார் கோத்தாபய:‐
யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர் பூர்வீகமான வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை மறுத்துள்ள இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ வன்னியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கான தங்குமிடங்களே அங்கு அமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அணைக்குழவினால் மேற்கொள்ளப்பட்ட இன்றைய விசாரணையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இப்படி கூறினார்.

சர்வதேச கற்கைகளுக்கான கதிர்காமர் நிலையத்தில் இன்று நடைபெற்ற இந்த விசாரணையின் போது இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலளார் கோத்தபாய ராஜபக்ஸ சாட்சியமளித்தார்.

இங்கு சாட்சியமளித்த பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்ததாவது :‐

புலிகள் மிகவும் சக்திவாயந்த போராட்ட அமைப்பு என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்களிடம் இராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளும் இருந்தன.

நாம் மிகவும் எளிதான அல்லது சுலபமான அமைப்பை வெற்றிகொள்ளவில்லை. மிகவும் சக்கதிமிக்க பலம் வாய்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகளைக் கொண்ட அமைப்பையே வெற்றிக்கொண்டுள்ளோம்.

நடைபெற்று முடிந்த யுத்தத்தில் புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் காணப்பட்ட பாரியளவிலான ஆயுதங்கள் விமானம், பீரங்கி உட்பட பலவும் அழிக்கப்பட்டுள்ளது.

இலங்கை படைத்தரப்பிலே 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், சுமார் 30 ஆயிரம் பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

ஆகவே இவ்வாறான அழிவை ஏற்படுத்திய புலிகளுக்கு எவ்வளவு இழப்பு நேர்ந்திருக்கும் என யாரும் கதைப்பதில்லை. மாறாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றம் கொல்லப்பட்ட மக்கள் குறித்தே அதிகமாக பேசப்படுகின்றது என்றும் கூறினார்.

இதன் போது வன்னியிலே சிங்கள குடியேற்றங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் வன்னியிலே சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை எனவும், அங்கு கடமையில் ஈபட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கான தங்குமிட வசதிகளே ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive