Wednesday, August 18, 2010

வீடமைப்புத் திட்டங்களுக்குக் காணி விபரம் திரட்டப்படுகிறது.

Wednesday, August 18, 2010
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளினதும் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையை அதிகார சபை ஆரம்பித்துள்ளது.

வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணிப்பதற்காக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

காணிகளின் சகல விபரங்களையும் திரட்டும் நடவடிக்கைகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் குறுகிய காலத்திற்குள் காணிகளின் பட்டியலொன்றைச் சரியான முறையில் தயாரித்துக்கொள்ளக் காணி நடவடிக்கைக் குழு ஒழுங்குகளை மேற்கொள்ளும்.

இந்த நடவடிக்கையின்போது கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கண்டி, ஆகிய மாவட்டங்கள் சம்பந்தமாக விசேட கவனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இம்மாவட்டங்களில் குறைந்த பட்சம் 500 ஏக்கர் அளவிலான காணி விபரங்கள் திரட்டப்பட்டு, வீடில்லாத குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive