Tuesday, November 2, 2010

பூட்டான் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை!

Tuesday, November 2, 2010
பூட்டான் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஐவரைக் கொண்ட குழு நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இலங்கை நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரிலேயே மேற்படி குழு இலங்கை வரவுள்ளது.

பூட்டான் தேசிய கவுன்சிலின் தலைவர் நம்கி பென்ஜோவை தலைமையாகக் கொண்ட இக்குழு நாளை மறுதினம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளது.

தனது வருகையின் போது பிரதமர் டி.எம்.ஜயரத்ன மற்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரை குழு சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive