Tuesday, November 2, 2010

Tuesday, November 2, 2010

பத்மநாபா ஈழமக்கள் புரசீகர விடுதலை முன்னணியினரின் சர்வதேசிய பிராந்திய மகாநாட்டில் கலந்கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு விஐயம் மேற்கொண்டிருக்கும் முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் தோழர் வரதராஐப்பெருமாள் அவர்கள்...........சுவிஸ் நாட்டிற்கு விஐயம்.

பிரான்ஸ் நாட்டில் மகாநாட்டினை நிறைவு செய்து கொண்டு அங்கு விசிக்கும் தமிழ் மக்களை காண பிரான்ஸ் ஜெர்மன் சுவிஸ் நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார் தோழர் அவர்களை புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் மக்கள் சந்தித்து உரையாட அனைத்து நாடுகளிலும் ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்படிருந்தது அது போலவே சுவிஸிலும் குறிப்பாக பேர்ன் சூரிச் ஆகிய மானிலங்களில் ஒழுங்குகள் அமைக்கட்டிருந்தது மக்கள் தோழர் வரதராஐபெருமைளை பல பொது நலத்தை விரும்பிய மக்கள் வந்திருந்தனர் தோழரை காண மக்கள் ஆர்வத்துடன் சமூகம் தந்திருந்தினை காணக்கூடியதாகவிருந்தது தோழர் வரதராஐப்பெருமாளிடம் மக்கள் தங்கள் மனதிலிருந்நெடுகாலமாக பதில்தெரியாத கேள்விகளுக்கு தெளிவான கருத்தான பதில்களை அறிந்து தெளிவுடன் சென்றதை காணக்கூடியதாகவிருந்தது கலந்துரையாடலில் கலந்து கொண்ட மக்கள் நீண்ட காலத்திற்கு பிறகு ஓரு தெளிவான பதில் தரும் மனிதனை சந்தித்த திருப்தியோடும் மன மகிழ்ச்சியுடனும் சென்றனர் மக்கள் மனதிலிருந்த கேள்விகளுக்கு தோழர் அவர்கள் மிகமிக தெளிவான கருந்துக்களை வழங்கியமை தோழர்கள் மத்தியிலும் மக்கள் மத்திலும் மனநெகிழ்வினை தந்தது.

மக்களிடமிருந்துபிறந்த ஓரு சில கேள்விகளை உங்கள் மத்தியில் தருவதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம

(1)வடக்கு கிழக்கு சரியான முறையில் இணைக்கப்படவேண்டுமா?
(2)நாடுகடந்த தமிழீழம் என்றான் என்ன?
(3)அரசாங்கத்தின் தற்போதய தீர்வுத்திட்டம் என்ன?
(4)இலங்கை நாட்டில் தமிழ்மக்கள் மத்தியில் ஈபிஆர்எல்வ் கட்சியின் பொதுவா கருத்து என்ன?
(5) மக்களுக்கான தீர்வு திட்டத்தை ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணியினர் பெற்று தருவார்களா?
(6) ஈழ தமிழ் மக்களின் நிதந்தர தீர்வுத்திட்டத்திற்கான அண்டய நாடான இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
மக்கள் மத்தியில் எழுந்த கேள்விகளுக்கு தோழர் வரதராஐப்பெருமாள் அவர்கள் மிகவும் ஆணித்தரமான பதில்களை மிகமிக தெளிவான முறையில் விரிவு படுத்தியிருந்தார் நாங்கள் என்றுமே பழிஉணர்ச்சியுடன அலைபவர்கள் இல்லை நாம் என்றுமே மக்களுக்காகவே குரல் கொடுக்கும் அமைப்பாகவே இருந்து வருகிறது க.பத்மநாபாவின் அழியாப் புகழ் பெற்ற வாக்கியமாகிய என்றுமே நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிக்கிறோம் கருத்து மிக்க வாக்கியத்தை தெரிவித்திருந்தார்....

தோழமையுடன்

பத்மநாபா ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி சுவிஸ் கிளை

பத்மநாபா EPRLF சர்வதேச கிளைகளின் ஒன்றியம்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive