Tuesday, November 2, 2010

அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத நான்கு தமிழ் அரசியல் கட்சிகள் விரைவில் புதியதொரு கூட்டணியை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது!

Tuesday, November 2, 2010
அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத நான்கு தமிழ் அரசியல் கட்சிகள் விரைவில் புதியதொரு கூட்டணியை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக தமிழத் தேசிய விடுதலைக் கூட்டணியின் செயலாளர் சிவாஜிங்கம் கொழும்பு ஆங்கில நாளேடுக்கு தெரிவித்தபோது புதிய அரசியல் கூட்டணி கூட்டுத் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும். ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, வரதராஜப்பெருமாள் தலைமையிலான பத்மநாபா EPRLF , சித்தார்த்தன் தலைமையிலான புளொட், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளை உள்ளடக்கியதாக இந்தக் கூட்டணி செயற்படவுள்ளது. கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இதுபற்றி எம்முடன் பேசியுள்ளது. இந்தக் கூட்டணிக்கான பெயர் குறித்து நாம் விரைவில் முடிவு செய்யவுள்ளோம்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive