Friday, August 5, 2011

செனல்4 ஆவணப்படம் குறித்து விசாரணை நடத்தப்படும் - LLRC

Friday, August 5, 2011
செனல்4 ஆவணப்படம் குறித்து விசாரணை நடத்தப்படும் என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் அண்மையில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையில் அந்தத் தகவல்களை உள்ளடக்குவது என தீர்மானித்துள்ளது.

இந்த ஆவணப்படம் தொடர்பில் ஆய்வு நடத்தும் விசேட நிபுணர்கள் பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட மாட்டாது என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

செனல்4 ஊடகத்தினால் கடந்த முறை வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை ஆய்வு செய்த நிபுணருக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும் அதனால் இம்முறை நிபுணரின் பெயரை வெளியிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய ஆவணப்படத்தை நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள் எனவும், அதனை விசாரணை செய்து இறுதி அறிக்கையில் தரவுகள் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive