Tuesday, August 16, 2011

புதிய யுகத்தை நோக்கி இலங்கை நகர்வு- இந்திய உயர்ஸ்தானிகர்!

Tuesday, August 16, 2011
இந்திய அரசாங்கமானது தற்போது இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் சீர்திருத்தச் செயற்பாடுகள் மற்றும் மீள்நிர்மான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து இடம்பெறவுள்ள செயற்பாடுகளுக்கும் தமது உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா நேற்று(ஆகஸ்ட்- 15) தெரிவித்தார்.

இந்திய உயஸ்தானிகர் அலுவகத்தில், 65 ஆவது இந்தி சுகந்திரத்தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அழகிய நாடான இலங்கை புதிய யுகத்தை நோக்கி நகர்ந்துவருவதாகவும், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பல நிகழ்வுகள் மூலம் உறுதியான பிணைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெவித்தார்
இந்தியாவின் பாரியதொரு முதலீடு மூலம், திருகோணமலை சம்பூர் பிரதேத்தில் 500 மெகாவோட் அனல் மின் உற்பத்தி செயற்ப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தலைமைத்துவம் மற்றும் இலங்கை மக்களாலுமே இவ்விரு நாடடுகளுக்கு இடையில் சிறந்த நட்புறவு பாலம் எற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive