Friday, August 5, 2011

வடக்கில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது – சுபினேய் நான்டி!

Friday, August 5, 2011
வடக்கில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினேய் நான்டி தெரிவித்துள்ளார்.

எனினும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவது தொடர்பில் பல்வேறு சவால்கள் நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு நான்டி விஜயம் செய்துள்ளார். யுத்தத்தின் பின்னர் பிரதேச மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அவர் நேரில் கேட்டறிந்து கொண்டார்.

அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கனை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive