Thursday, July 7, 2011

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு!!!

Thursday, July 7, 2011
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் எதிர்வரும் வாரங்களில் சந்திக்கவுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்ஸ்தானிகர் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலிருந்து இந்தியா சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கமே இதனை ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் நாட்டுக்கிடையிலான உறவு மேலான்மையில் சிக்கல்களைத் தோற்றுவித்தாலும் மிகுந்த அவதானத்துடனேயே அவர் இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive