Tuesday, July 5, 2011

சில அரசாங்க அதிகாரிகள் தேசிய கீதத்திற்கு உரிய மதிப்பு அளிப்பதில்லை – ஜனாதிபதி!

Tuesday, July 5, 2011
சில அரசாங்க அதிகாரிகள் தேசிய கீதத்திற்கு உரிய மதிப்பளிப்பதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகளும் சில காவல்துறை உத்தியோகத்தர்களும் தேசிய கீதத்திற்கு உரிய கௌவரம் வழங்குவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர் உரிமை மற்றும் சமூகப் பண்புகளை மேம்படுத்தும் விசேட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக விழுமியங்களும் தேசப்பற்றும் சிறு பராயத்திலேயே பயிற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி ஊடாக மேற்குலக கலாச்சாரத்தை பார்த்து பழகியுள்ள நாம் அதற்கு அடிமையாகி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் மொழி உசிதமானதல்ல எனவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய கீதம் இசைக்கப்படும் போது சில அரசியல்வாதிகள் அதற்கு ஏற்றவாறு நடனமாடுவதாகவும் தாம் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive