Sunday, May 8, 2011

ஐ.நா. செயலாளரின் நிபுணர் குழு கலைப்பு;இரகசியங்களை வெளியிடத் தடை!

Sunday, May 8, 2011
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவென ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தருஷ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய நிபுணர் குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் கடந்த வருடம் நியமித்திருந்தார். இக்குழு பல வழிகளில் சாட்சியங்களைப் பெற்று இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்களை 192 பக்க அறிக்கையாக தயாரித்து அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளித்ததோடு, அவர் அதனை அம்பலப்படுத்தியிருந்தார்.

அவ்வாறான நிலையில் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் முற்றுப்பெற்றுள்ளதால் நேற்று ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் அதனைக் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நிபுணர் குழுவிடம் சாட்சியளித்தவர்களின் இரகசியத் தன்மை எதிர்வரும் இருபது வருடங்களுக்கு பேணப்பட வேண்டுமென நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive