Thursday, May 19, 2011

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் புதிய விமானம் கொள்முதல் ஏ-320: பிரான்ஸிலிருந்து இன்று கட்டுநாயக்க வருகை!

Thursday, May 19, 2011
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ¤க்குப் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஏ-320 ரக பயணிகள் விமானம் இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைகிறது.

பிரான்ஸின், டுலஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படும் இப்புதிய பயணிகள் விமானம் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் கட்டுநாயக்கா விமான தளத்தில் தரையிறங்குகிறது.

சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன இவ்விமானத்தில் இலங்கை வருகிறார். ஸ்ரீலங்கன் விமான சேவையின் 18 வது விமானமாக இணைத்துக் கொள்ளப்பட வுள்ள இப்புதிய ஏ- 320 ரக விமான த்தில் 20 “பிஸ்னஸ் கிளாஸ்” இருக்கைகளும் 120 சாதாரண இருக்கைகளும் கொண்ட தாக உள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி ஸ்ரீலங்கன் விமான சேவை தனது சேவையை விஸ்தரிக்கும் நோக்குடன் 52 ஆவது சேவையாக ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கான நேரடி விமான சேவையையும் ஆரம்பிக்கிறது என அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண கூறினார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive