Sunday, May 8, 2011

ஐநா அறிக்கை - இந்திய உயர்மட்டக் குழு வெள்ளியில் இலங்கை வருகை!

Sunday, May 8, 2011
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் இறுதிக் கட்ட யுத்தம் குறித்து ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆராய இந்தியாவின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரவுள்ள குழுவில் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட சிலர் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழு ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதுடன் பான் கீ மூன் நிபுணர் குழுவை அடிப்படையாக வைத்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் 16ம் திகதி இந்தியா செல்லவுள்ளதுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive