Thursday, April 8, 2010

வன்னியில் அமைதியான முறையில் தேர்தல்

வன்னித் தேர்தல் தொகுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் 26 சதவீதமான மக்கள் வாக்களித்திருக்கும் அதேவேளை, இடம்பெயர்ந்த மக்கள் 52 வீதமான வாக்களிப்பினை செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
வன்னித் தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று குறிப்பிட்டார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive