Thursday, April 8, 2010

நேரகாலத்தோடு வாக்களியுங்கள்

THURSDAY, APRIL 08, 2010
நேரகாலத்துடன் வாக்குச்சாவடிக ளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இறுதிநேர நெருக்கடிகளைத் தவிர்க்கவும் அமைதியான தேர்தலை உறுதி செய்யவும் வாக்காளர்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று ஆணையாளர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
வாக்காளர்கள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையையும் ஆளடையாள த்தை நிரூபிக்கும் அடையாள அட்டையையும் தம்முடன் வாக் குச்சாவடிக்கு எடுத்துச்செல்ல வேண் டும். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபித்து வாக்குச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
குளறுபடிகள், குழப்பங்கள் ஏற்பட்டதாக புகார் கிடைக்கும் பட்சத் தில் குறித்த வாக்குச்சாவடியில் மேற்கொண்ட வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்படுமென்றும் ஆணையாளர் எச்சரித்துள்ளார்
.

No comments:

Post a Comment

Followers

Blog Archive