SUNDAY MARCH 28,2010
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் நிறைவு ? தேர்தல்கள் செயலகம்!
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்களின் பிரசார கூட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம்அறிவித்துள்ளது.
இந்நிலையில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டு சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறு பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிற்கு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னரே சட்டவிரோத பிரசார சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறு தேர்தல்கள் செயலகத்தினால் பொலிஸ் திணைக்களத்திற்கு 22 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்தது.
எனினும், தேர்தல்கள் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் தொடரந்;தும் அகற்றப்படாத நிலையில் உள்ளால் தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸ் மா அதிபருக்கு மீண்டும் உத்திரவிட்டுள்ளார்.
இதேவேளை, சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை தொடர்ந்தும் அகற்றப்பட்டு வருவதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் நிறைவு ? தேர்தல்கள் செயலகம்!
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்களின் பிரசார கூட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம்அறிவித்துள்ளது.
இந்நிலையில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டு சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறு பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிற்கு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னரே சட்டவிரோத பிரசார சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறு தேர்தல்கள் செயலகத்தினால் பொலிஸ் திணைக்களத்திற்கு 22 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்தது.
எனினும், தேர்தல்கள் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் தொடரந்;தும் அகற்றப்படாத நிலையில் உள்ளால் தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸ் மா அதிபருக்கு மீண்டும் உத்திரவிட்டுள்ளார்.
இதேவேளை, சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை தொடர்ந்தும் அகற்றப்பட்டு வருவதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment