Sunday, March 28, 2010

Sunday, March 28, 2010
வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கண்காணிப்பாளர்களை அனு மதிக்க முடியும் என தேர்தல் ஆணை யாளர் தயானந்த திஸநாயக்கா நேற்று அரசியல் கட்சிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்த லில் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு கண்காணிப் பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.ஒவ்வொரு தேர்தல் கண்காணிப் புக் குழுவில் இருந்தும் ஒருவர் வாக்கு எண்ணப்படும் நிலையங் களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதனிடையே எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் ஏனைய பொருட்கள் அகற்றப்படும் என பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய உறுதியளித்துள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது.



.

No comments:

Post a Comment

Followers

Blog Archive