Wednesday, March 7, 2012

குற்றவியல் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் - அரசாங்கம்!

Wednesday, March 7, 2012
நாட்டின் குற்றவியல் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் எனஅரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சட்டத்தரணிகளை கடமையில் ஈடுபடுத்தும் வகையில் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என முன்னாள் சட்ட மாஅதிபரும், அரசாங்கத்தின் சட்ட ஆலோசகருமான மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதில்அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சித்திரவதைகளிலிருந்து மீளக் கூடிய வகையிலான பாதுகாப்புஏற்படுத்திக்கொடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாகஇலங்கையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் சட்டத் திருத்தங்கள்செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சித்திரவதைச் சம்பவங்களுக்கு எதிராக ஏற்கனவே வழக்குத்தொடரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive