
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் இராணுவ மற்றும் பொருளாதாரஒத்துழைப்புகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ நன்றி பாராட்டியுள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் மிக நெருக்கடியான முனைப்புக்களின்போது சீனாவின் ஒத்துழைப்பு அளப்பரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் நாட்டின்ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 55 ஆண்டுகள்பூர்த்தியாவதனை முன்னிட்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்ட போதுஅவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மெய்யான நல்லிணக்க முனைப்புக்களை பலவீனப்படுத்தும்வகையில் சில மேற்குலக நாடுகளும் புலி ஆதரவாளர்களும் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான உறவு காணப்படுவதாகவும்இந்த உறவு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment