Saturday, January 7, 2012

எஸ்.எம்.கிருஷ்ணா, ராஜதந்திர ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தவே இலங்கை வருகின்றார் - லலித் வீரதுங்க!

Saturday, January 7, 2012
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ராஜதந்திர ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவே, இலங்கை வருவதாகவும் அவரது வருகை இலங்கை அரசாங்கத்திற்கு எந்த விதத்திலும் அழுத்தங்களை கொடுக்கும்படி இருக்காது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அமைச்சர் தனது விஜயத்தின் போது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, இதுவரை இந்தியாவிடம் இருந்து பாதகமான கருத்துக்களை இந்தியா வெளியிடவில்லை எனவும் வீரதுங்க மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive