Sunday, November 6, 2011

நாட்டின் நற்பெயருக்கு களங்கம்; பாதுகாப்பது நமது பொறுப்பு விசாகா பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி!

Sunday, November 6, 2011
நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாது பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப் பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நவீனத்துவம் என்பது நாட்டுக்குப் பொருத்தமில்லாததைச் செய்வதல்ல. கடந்த கால வரலாற்று மதிப்பீடுகளைப் பாதுகாத்துக் கொண்டு முன் செல்வதே எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளிநாட்டுப் பழக்க வழக்கங் கள் நமக்குப் பொருத்தமில்லாதது என தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச அறிஞர்களின் நூல்களைப் போன்றே நமது அறிஞர்களினதும் நூல்கள் நமக்குப் பொக்கிஷங்க ளாக உள்ளன. அவற்றைத் தேடிக் கற்பதில் நமது மாணவ சமுதாயம் முன்னிற்பது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது நாட்டை வெளிநாடு களில் தரங்குறைத்து கூறுவதற்கோ, நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு விசாகா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் கல்லூரி மண்டபத்தில் அதிபர் சந்தமாலி அதுருப்பொல தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சின் செயலாளர், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

விசாகா கல்லூரி கீர்த்தி மிகு வரலாற்றைக் கொண்ட கல்லூரியாகும். கல்வியிலும் விவாதங்களிலும் அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் நிகழும் நமது நாட்டு சொத்து இது. இக்கல்லூரி கொழும்புக்கு மட்டும் உரித்தானது அல்ல. முழு நாட்டினதும் உரிமைச் சொத்தாகும்.

எனது மாணவ பருவத்தில் நான் கற்ற தேர்ஷ்டன் கல்லூரிக்கும் விசாகா கல்லூரிக்குமிடையில் நடைபெறும் விவாதங்களில் நானும் பங்கேற்றிருக்கின் றேன். அக்காலத்திலேயே இக்கல்லூரி தமது திறமையை வெளிக்காட்டியுள்ளது. இக்காலத்திலும் இப்பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ள பெறுபேறுகள் இந்த நாட்டின் எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையைத் தோற்று விக்கின்றது. 93 வருடம் பழைமை வாய்ந்த இந்த பாடசாலையை ‘கொஸ் மாமா’ என்ற வீரபுருஷர் தனது தாயின் நினைவாக முதலில் நிர்மாணித்து வழங்கினார். அன்றிலிருந்து இந்த கல்லூரி சகல துறைகளிலும் பிரகாசித்து வருகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive