Sunday, November 6, 2011

சென்னை முகப்பேரில் தங்கபாஸ்கரனுக்கு பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள் அஞ்சலி!

Sunday, November 6, 2011
சென்னை முகப்பேரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த எங்கள் தோழன்பாச்சா என்று அனைவராலும் அழைக்கப்டும் தங்கமணி தங்கபாஸ்கரன் இன்று (1.11.2011) தனது சிறுநீரக கோளறு காரணமாக காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை சென்னை முகப்பேரில் எதிர்வரும் திங்கட்கிழமை(7.11.11) அன்று நடைபெறும்.

யுhழ்ப்பாணம் நெல்லியடியை பிறப்பிடமாக் கொண்ட தோழர் தங்கபாஸ்கரன் நெல்லியடியில் ஈ.பிஆர்.எப் இன் அரசியல் பிரிவில் செயல்பட்டு கட்சிக்காகவும்,மக்களின் நலனுக்காவும் பெரிதும் உழைத்தவர். ஏல்லோருடனும் இன்முகத்துடனும்,அவரது இயல்பான நகச்சுவை உணர்வாலும் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்ரிருந்தார்.ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை இறைவன் கொடுத்திருப்பார் அந்த வகையில் நகைச்சுவை உணர்வை தங்கபாஸ்கரன் பெற்றிருந்தார்.

புலிகளின் எதேச்சதிகார போக்கு காரணமாக நெல்லியடி மக்களுக்கான பணியினை அவர் தொடர்வதற்கு தடைகள் பல ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் புலிகளின் அச்சுறுத்தலால் தமிழ் நாட்டுக்கு இடம் பெயர்ந்தார்.

தோழர்தங்பாஸ்கரனிடம் இயல்பாகவே பல திறமைகள் புதைந்து கிடந்தன அவற்றை அவர் தமிழகத்தில் வெளிகாட்டினார். 50க்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் ஒலிநாடாவை வெளியிட்டுள்ளார். சிறந்த மிருந்தங்க கலைஞராகவும் அவர் செயல்பட்டார். வேதா என்ற சினிமா படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

சிறந்த ஒரு தோழன்,கலைஞன,; தான் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்காமல், அவனை அடையாளம் தெரியாமல், ஆக்கியவர்கள் இன்று அடையாம் தெரியாமல் போய்விட்டபோதும்,பல திறமைகளை பெற்றிருந்த தோழனின் இழப்பு என்றும் நமது சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாதது.

இவர் பிரிவால் துயருறும் அவர் குடும்பாத்தாருக்கு எங்கள் மனமார்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் தோழன்,எங்கள் கவலைகளை தனது நகச்சுவை உணர்வு மூலம் பல தடவைகள் மறக்கச் செய்த, அவருக்கு எங்கள் இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி

(பத்மநாபா EPRLF)

No comments:

Post a Comment

Followers

Blog Archive