Thursday, October 6, 2011

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகிறார்!

Thursday, October 6, 2011
இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய் நாளை இலங்கை வரவுள்ளார்.
இலங்கை வரும் இவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் இங்கு தங்கியிருப்பார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய இலங்கை மீனவர்களில் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக இடம்பெறும் பேச்சு வார்தையில் கலந்துகொள்வதன் பொருட்டே அவர் இலங்கை வருகிறார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாயுடன் இந்திய தூதுக்குழுவினரும் இலங்கை வருகின்றனர்.

இதனிடையே, இவர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் தற்போதைய நிலவரங்கள் குறித்து ரஞ்சன் மாத்தாயுடன் கலந்துரையாடப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive