Thursday, October 6, 2011

திருமலை விபத்தில் 13 படைவீரர்கள் காயம்: ஒருவர் மரணம்!.

Thursday, October 6, 2011
திருகோணமலை, பூநகர் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 13 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

திருகோணமலை, திஸ்ஸ கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற பயிற்சி ஒன்றில் கலந்து கொண்ட இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று பூநகர் பிரதேசம் வழியாகச் சென்று கொணடிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றுடன் மோதியதையடுத்தே ஒருவர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த 14 இராணுவ வீரர்களும். சேருநுவர, கந்தளாய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive