Monday, September 12, 2011

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 66ம் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்!

Monday, September 12, 2011
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 66ம் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 23ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி விசேட உரையாற்றுவார் எனக் குறிப்பிடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65ம் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 13ம் திகதி உத்தியோகபூர்வமாக முடிவுறுத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 66ம் பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் எதிர்வரும் 13ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி எதிர்வரும் 18ம் திகதி அமெரிக்காவைச் சென்றடைவார் என இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுச் சபைக் கூட்டத்திற்கு சமாந்திரமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பல நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைமைப் பொறுப்பிற்கு கட்டாரைச் சேர்ந்த நாசீ அப்துல்அசீஸ் அல் நாசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அல் நாசர் மிக நீண்ட காலகமாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான கட்டாரின் நிரந்தரப் பிரதிநிதியாக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive