Monday, August 29, 2011

யாழ். பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை தெரிவிக்க தமிழில் விண்ணப்பங்கள்!

Monday, August 29, 2011
யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை செய்வதில் காணப்படும் மொழிப்பிரச்சினையை நீக்கும் முகமாக பொது மக்கள் தமது முறைப்பாடுகளை தமிழில் எழுதிக் கொடுக்கத்தக்கவாறான படிவங்கள் பொலிஸ் நிலையங்களில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை யாழ்ப்பாணம் , கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.டி தளுவத்த பொது மக்களுக்கு அறிவித்துள்ளார். கடந்த காலத்தில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைச் செய்வதற்கு சிங்களம் தெரிந்த தரகர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டது

தற்போது, பொது மக்கள் தமது பிரச்சினைகளை தமிழ் மொழியில் தாமே எழுதிக் கொடுத்து தமது பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive