Sunday, May 22, 2011

காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தி!

Sunday, May 22, 2011
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தேவையான இந்தியப் பொருள்களை இறக்குவதற்கான முக்கியமான ஒரு பிராந்தியத் துறைமுகமாக காங்கேசன்துறைத் துறைமுகத்தை மாற்றுவதே அதனை அபிவிருத்தி செய்வதற்கான அரசின் முக்கிய நோக்கமாகும் என அரசாங்கம் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் வடக்கு, கிழக்குக்கான உதவித்திட்டத்தின் கீழ் இந்தத் துறைமுக அபிவிருத்திக்கான நிதி வழங்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் யாவும் இரண்டு வருட காலத்தினுள் நிறைவுபெறும்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியத் பண்டு விக்கிரம, இந்தியத் துறைமுக நகரங்களான தூத்துக்குடி, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களுக்கு எடுத்து வரப்படும் பொருள்களான சிமெந்து, உரவகைகள், வெங்காயம் ஆகியவற்றைக் காங்கேசன்துறைத் துறைமுகமே கையாளும்.

மேலும் எட்டு அடி ஆழமாக்கப்பட்டு இதனைப் பூரணமாக அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கிடையில் கைச்சாத்திடப்படும். இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தை உள்ளடக்கிய இந்திய அதிகாரிகள் தற்போது காங்கேசன்துறையில் உள்ளனர்.

இந்திய அரசு ஆரம்ப சாத்தியமான விடயங்களை ஆராய்வதற்கென 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மணல் வாருதல், துறைமுக மேடை கள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive