Sunday, March 20, 2011

உள்ளுராட்சி மூலம் மலையகத்தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டுள்ளது - பி.திகாம்பரம்!

Sunday, March 20, 2011
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்திலும் மலையக மக்கள் முன்னணியுடனான கூட்டுத்தொடருமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து நுவரெலியாவில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய பொதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தக்கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி தேவி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியின் அரசியற்பிரிவு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஸ்ணன் உட்பட வெற்றிப்பெற்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட பி.திகாம்பரம் மலையகத்தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினைத் தக்க வைத்துக்கொள்வதற்காக இந்தத்தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட்டதாகவும் இதன் மூலமாக பாரிய வெற்றி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மலையகத்தில் சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி பெரும்பான்மைக்கட்சிகள் வெற்றிப்பெற முடியாது என்பதை இந்தத்தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளது. மலையக மக்கள் முன்னணியும் தொழிலாளர் தேசிய சங்கமும் இணைந்து நுவரெலியா பிரதேச சபையைக் கைப்பற்றியுள்ளமை வரலாற்றுச சாதனையாகும்.

நுவரெலியா பிரதேச சபைத்தேர்தலில் மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க முற்பட்ட போதும் மக்கள் துணிந்து வாக்களித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இந்தத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர். இவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறுயள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive