Sunday, February 27, 2011

மொபைல் போனில் ஆபாச வீடியோவா?4 மாதம் சிறை செல்ல நேரிடும்.

Sunday, February 27, 2011
மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை வைத்திருப்பவர் களுக்கு எதிராக சட்டம் கடும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் மொபைல் போனில் ஆபாச வீடியோ வைத்தி ருந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றத்தால் நான்கு மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த செவ் வாய்க்கிழமை தெல்லிப்பளைப் பொலி ஸாரால் சோதனைக்கு உட்படுத் தப்பட்ட இளைஞர் ஒருவரின் மொபைல் போனில் ஆபாச வீடியோ இருந் துள்ளது. பொலிஸார் குறிப்பிட்ட இளைஞரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தி தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றன.

விசாரணைகளுக்கு அமைய குறிப்பிட்ட இளைஞர் குற்றவாளியாக இனம் காணப்பட்டார். அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கல்லூரி செல்லும் இளைஞர்கள் தொடக்கம், பள்ளி செல்லும் மாணவர்கள் வரை பலரது மோபைல் போன்களில் இவ்வாறான ஆபாசப்படங்கள் பரவலாகக் காண்பபடுகிறது. இது போன்ற படங்களை மாணவிகளுக்கு காண்பித்து உணர்ச்சிகளைத் தூண்டி சிலர் அதில் குளிர் காய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

Followers

Blog Archive