Thursday, October 28, 2010

விளம்பரப் பலகை பொருத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை!

Thursday, October 28, 2010
கொழும்பு நகரில் விளம்பரப் பலகைகளை பொருத்தவேண்டுமாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறி வுறுத்தப்பட்டுள்ளது.முன்னர் இதற்கான அனுமதிகளை கொழும்பு மாந கரசபை வழங்கி வந்தது.

இனிமேல் விளம்பரப் பலகைகளை வைப்பதற்கான விண்ணப்பங் களை பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும் என கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஓமர் காமிலுக்கு உயர் மட்டத்தி லிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் பரிந்துரை கிடைத்த பின்னரே பாது காப்பு அமைச்சு அனுமதியை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அரசாங்கத்தில் இந்த நடவடிக்கையினால் கொழும்பு மாநகரசபைக்கு கிடைத்து வந்தவருமானம் இல்லாமல் போகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு நகரில் உள்ள சகல பாதுகாப்பு காவலரண்களை யும் அகற்றும் நடவடிக்கை நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணு வப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய இடங்களிலுள்ள காவலரண்கள் அகற்றப்பட்டுள்ளன.

கொழும்பு நகர எல்லைக்குள் இருக் கும் ஏனைய காவலரண்கள் அனைத் தும் அடுத்த சில தினங்களில் அகற்றப் படவுள்ளன எனவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive