Sunday, August 8, 2010
அமெரிக்காவின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 40 அதிகாரிகள் எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரியவருகிறது. இந்த அமெரிக்கப்படையினர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர் என தூதரக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள வென உயர் அதிகாரிகள் 40 பேர் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.
இவர்களில் இராணுவம், கடற் படை மற்றும் விமானப்படை ஆகிய பாதுகாப்பு தரப்பினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இதேவேளை இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தப் பணிகளுக்காக அமெரிக்கா 581 மில்லியன் ரூபாயை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக அமெரிக்கா வழங்கியுள்ளது. இதனைத்தவிர மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவிகளை வழங்கவுள்ளதாக இலங் கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 40 அதிகாரிகள் எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரியவருகிறது. இந்த அமெரிக்கப்படையினர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர் என தூதரக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள வென உயர் அதிகாரிகள் 40 பேர் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.
இவர்களில் இராணுவம், கடற் படை மற்றும் விமானப்படை ஆகிய பாதுகாப்பு தரப்பினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இதேவேளை இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தப் பணிகளுக்காக அமெரிக்கா 581 மில்லியன் ரூபாயை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக அமெரிக்கா வழங்கியுள்ளது. இதனைத்தவிர மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவிகளை வழங்கவுள்ளதாக இலங் கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment