Friday, March 26, 2010

FRIDAY, MARCH 26, 2010
மக்கள் சேவகர் இராஜரட்ணம் கோணேஸ்வரன் பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்-புளொட் கூட்டமைப்பு
மக்கள் சேவகர் இராஜரட்ணம் கோணேஸ்வரன்
கிராஞ்சி பூனேரி
அன்புடையீர்
புளொட் அமைப்பைச்சேர்ந்த இராஜரட்ணம் கோணேஸ்வரன் அவர்கள் உங்கள் இன்ப துன்பங்களில் பங்குபற்றி உங்களோடு வாழும் மனிதர்.
ஊரும் உறவுகளும் சொல்லொணா வேதனைகள் இழப்புக்களுடன் இடம்பெயர்ந்தபோது உங்களுடன் சகமனிதராக வாழ்ந்தவர்.
இதையும் விட பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வருபவர்.
செந்தாமரை விளையாட்டுக்கழகத்தின் தலைவர். கற்பக வினாயகர் கோயிலின் முகாமையாளராக அறப்பணியாற்றி வருபவர்.
இடம்பெயர்ந்து செட்டிகுளம்- மெனிக்பாம்- அருணாசலம் அகதி முகாமில் வாழ்ந்த போது முகாமில் மிகப்பாரிய துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்.
கிராஞ்சி பூனேரியைச் சேர்ந்த திரு: கோணேஸ்வரன் அவர்கள் உங்கள் ஊரவர். உங்கள் நண்பர். உற்ற சுற்றமும் கூட.
அன்னாரைப் பாராளுமன்றம் அனுப்புவதன் மூலம் உங்கள் அருகாமையில் இருந்து அவர் சேவையாற்றும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.
சின்னம் மெழுகுவர்த்தி
பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்-புளொட் கூட்டமைப்பு

No comments:

Post a Comment

Followers

Blog Archive